இந்திய சினிமாவின் உச்ச நட்சத்திரமான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை (Autobiography) எழுதி வருவதாகத் சினிமா வட்டாரங்களில் நம்பத்தகுந்த தகவல்கள் வெளியாகியுள்ளன. பஸ் கண்டக்டராக தனது வாழ்க்கையைத் தொடங்கி, அயராத உழைப்பாலும் தனித்துவமான பாணியாலும் உலகறியும் சூப்பர் ஸ்டாராக உயர்ந்த இவரது பயணம் கோடிக்கணக்கானோருக்கு உத்வேகமாக விளங்குகிறது. இந்நிலையில், தனது நீண்ட கால வாழ்க்கை அனுபவங்களை எழுத்து வடிவில் கொண்டுவரும் முயற்சியில் அவர் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
மேலும், தனது இந்த சுயசரிதைப் புத்தகத்தைத் திரைப்படமாக (Biopic Movie) மாற்றுவது குறித்து தனது நெருங்கிய நண்பர்கள் மற்றும் சினிமா துறை சார்ந்த நல்விருப்பாளர்களுடன் அவர் தீவிரமாக ஆலோசித்து வருவதாகவும் கூறப்படுகிறதது. ரஜினிகாந்தின் உத்வேகம் நிறைந்த வாழ்க்கைப் பயணத்தை மையமாகக் கொண்டு எதிர்காலத்தில் இந்தத் திரைப்படம் அதிகாரப்பூர்வமாக உருவானால், அது இந்திய அளவிலும் உலகளவிலும் சினிமா வரலாற்றில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை. பஸ் கண்டக்டரில் இருந்து சூப்பர் ஸ்டாராக உருவெடுத்த அவரது திரைக்கதை போன்ற நிஜ வாழ்க்கைக் கதையைத் திரையில் காண ரசிகர்கள் அனைவரும் இப்போதே மிகுந்த ஆவலுடன் காத்துள்ளனர்.













