தஞ்சை பெருவுடையார் கோவிலை கட்டியவன் ராஜராஜசோழன். இவருக்கு வருடம் தோறும் இவர் பிறந்த சதய நட்சத்திரத்தன்று சதய விழா எடுக்கப்படுகிறது. இதற்கு மக்கள் கூட்டம் அதிக அளவில் திரளும்.
மாமன்னன் ராஜராஜ சோழனின் 1035-வது சதய விழா வரும் 26-ம் தேதி தஞ்சையில் நடைபெற இருக்கிறது இதையொட்டி எப்பொழுதும் வழக்கமாக நடைபெறும்
காலை 9.15 மணிக்கு பெருவுடையார், பெரியநாயகி அம்மனுக்கு பேரபிஷேகம், மதியம் 1 மணிக்கு தீபாராதனை ஆகியவை தருமபுரம் ஆதீனம் மடம் சார்பில் நடைபெற உள்ளது.
கொரோனா தொற்றால் வழக்கமாக நடைபெறும் விழாவில் பெரிதும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.







