தமிழ் சினிமாவில் குறுகிய காலத்திலேயே டாப் 10 ஹீரோக்கள் லிஸ்டில் இடம்பிடித்தவர் பிரதீப் ரங்கநாதன். ‘கோமாளி’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி, ‘லவ் டுடே’ படத்தின் மூலம் ஹீரோவாகவும் கலக்கியவர். தற்போது இவர் நடித்துள்ள ‘டிராகன்’ மற்றும் ‘ட்யூட்’ ஆகிய படங்கள் வரிசையாக 100 கோடி ரூபாய் வசூலை வாரி குவித்து பாக்ஸ் ஆபீஸில் சாதனை படைத்துள்ளன. இந்த ஹாட்ரிக் வெற்றியால் பிரதீப்பின் மார்க்கெட் இப்போது எகிறிக்கிடக்கிறது. இந்நிலையில், அவர் தனது அடுத்த படத்திற்காக தெலுங்கு திரையுலகின் முன்னணி நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் உடன் கைகோர்த்துள்ளார்.
இந்த படத்தை தெலுங்கில் வித்தியாசமான கதைகளை எடுப்பதில் கில்லாடியான இயக்குனர் சந்திரசேகர் ஏலேட்டி இயக்கவுள்ளார். இது பிரதீப் ரங்கநாதனின் நேரடி தெலுங்கு அறிமுக படமாகவும் அமையவுள்ளது. இந்த புராஜெக்டுக்காக பிரதீப் ரங்கநாதனுக்கு சுமார் 50 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டுள்ளதாக சினிமா வட்டாரத்தில் பலமான பேச்சு ஓடிக்கொண்டிருக்கிறது. ஒரு இளம் ஹீரோவுக்கு இவ்வளவு பெரிய தொகை கொடுக்கப்படுவது கோலிவுட் மற்றும் டோலிவுட் ரசிகர்களிடையே பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த படம் ஒரு ஆக்ஷன் த்ரில்லர் ஜானரில் உருவாகவுள்ளதாம். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் ஏற்கனவே ‘புஷ்பா 2’ போன்ற பிரம்மாண்ட படங்களை தயாரித்து வருவதால், பிரதீப்பின் இந்த படமும் மிகப்பெரிய பட்ஜெட்டில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ‘எல்ஐகே’ படத்தில் நடித்து வரும் பிரதீப், அந்த படத்தை முடித்த கையோடு இந்த தெலுங்கு புராஜெக்டில் இணைவார் என்று சொல்லப்படுகிறது.
பிரதீப் ரங்கநாதனின் படங்கள் இளைஞர்களிடையே பெரும் வரவேற்பை பெறுவது தான். அவரது படங்களுக்கு இருக்கும் மினிமம் கேரண்டி வசூலை நம்பி தான் தயாரிப்பாளர்கள் இவ்வளவு பெரிய தொகையை முதலீடு செய்ய முன்வருகிறார்கள். இந்த படத்தை முடித்த பிறகு, பிரதீப் மீண்டும் இயக்குனராக அவதாரம் எடுக்கவுள்ளார். தனது ஃபேவரைட் தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் (AGS Entertainment) உடன் இணைந்து ஒரு பிரம்மாண்டமான சயின்ஸ் ஃபிக்ஷன் படத்தை இயக்கவும், அதில் அவரே ஹீரோவாக நடிக்கவும் பிளான் பண்ணியுள்ளார். அர்ச்சனா கல்பாத்தி ஏற்கனவே இந்த புராஜெக்டை உறுதி செய்துள்ளார். இதனால் பிரதீப்பின் ரசிகர்கள் செம குஷியில் இருக்கிறார்கள்.













