---Advertisement---

250 டாஸ்மாக் கடைகளுக்கு 500 போலிஸார் பாதுகாப்பு – ஏன் தெரியுமா?

By Sri
Published on: May 11, 2020
---Advertisement---

மதுரையில் டாஸ்மாக் கடைகளில் உள்ள மதுவகைகள் திருடு போகும் அபாயம் உள்ளதால் போலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம் முதல் தமிழகத்தில் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. மே 17 வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் நேற்று தமிழகம் முழுவதும் மதுபானக்கடைகள் திறக்கப்பட்டன. அதிலும் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள சென்னை மற்றும் சில பகுதிகளை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் மதுபானக்கடைகள் திறக்கப்பட்டன. மதுபானக்கடைகளை திறப்பதால் கொரோனா பரவும் அபாயம் அதிகரிக்கும் என எதிர்க்கட்சிகள் மற்றும் சமூக ஆர்வலர்களும் தங்கள் கண்டனங்களை தெரிவித்தனர்.

ஆனாலும் மே 7 மற்றும் மே 8 ஆகிய தேதிகளில் டாஸ்மாக் கடைகளை திறந்து 294 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியது. இந்நிலையில் டாஸ்மாக்கை மூட சொல்லி சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு விசாரணை நேற்று வந்தது. அதை விசாரித்த நீதிபதிகள் ஊரடங்கு முடியும் வரை டாஸ்மாக் கடைகளை மூட சொல்லி உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

இந்நிலையில் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட்ட உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக மேல் முறையீடு செய்துள்ளது. அந்த மனுவில் ‘ஊரடங்கு விதிமுறைகள் மதுக்கடைகளில் மீறப்படவில்லை.’ எனக் கூறியுள்ளது. ஊரடங்கு முடிய இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் தமிழக அரசு மீண்டும் மேல்முறையீடு செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் மதுரையில் உள்ள டாஸ்மாக் கடைகளில் இருப்பு வைக்கப்பட்டுள்ள மதுபாட்டில்கள் திருடுபோகும் அபாயம் இருப்பதால் 250 டாஸ்மாக் கடைகளுக்கு சுழற்சி முறையில் 2 போலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. போலிஸார் டாஸ்மாக் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள நிலையில் கொரோனா தடுப்பு பணிகளில் சுணக்கம் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Director Sreenu Vaitla talking about missing the chance to direct Ajith Kumar.

நடிகர் அஜித்துடனான அந்த பொன்னான வாய்ப்பை தவறவிட்டுவிட்டேன்: பிரபல தெலுங்கு இயக்குநர் வருத்தம்!

Actress Mrunal Thakur and cricketer Yashasvi Jaiswal sparking viral dating rumours.

பிரபல நடிகை மிருணாள் தாக்கூர் மற்றும் கிரிக்கெட் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் டேட்டிங் ரகசியம்? இணையத்தில் தீயாய் பரவும் வைரல் வீடியோ!

Movies and web series releasing on OTT platforms this week.

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் திரைப்படங்கள் மற்றும் வெப் தொடர்களின் முழு லிஸ்ட்!

Singer Kenesha Francis makes a social media comeback.

சர்ச்சைகளுக்குப் பிறகு சமூக வலைதளங்களில் கம்பேக் கொடுத்தார் கெனிஷா: ‘ஓடி ஓடி’ பாடலைத் தயார் செய்த அறிவிப்பு!

Vijay Sethupathi reveals the first look poster of Makkal Kaavalan.

மணிகண்டனின் ‘மக்கள் காவலன்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட விஜய் சேதுபதி!

RaminLeela official theatrical release date announcement poster.

ஆகஸ்ட் 21-ல் திரைக்கு வரும் ‘ராமன் லீலா’: அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு!