ஏப்ரல் 20 முதல் ஆன்லைனில் டிவி, பிரிட்ஜ் போன்றவற்றை ஆன்லைனில் வாங்லலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
ஊரடங்கு அறிவிக்கப்பட்டதில் இருந்து அமேசான் மற்றும் பிளிப்கார்ட் போன்றவற்றின் வணிக நடவடிக்கைகள் முடக்கப்பட்டன. அதனால் கடந்த் 25 நாட்களாக ஆன்லைனில் பொருட்கள் எதுவும் வாங்க இயலவில்லை. இந்நிலையில் மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் ஏப்ரல் 20 முதல் சில நிபந்தனைகளுடன் சில தொழில்களுக்கு மட்டும் விலக்கு அளித்துள்ளது.
இந்நிலையில் இதன் மூலம் ஆன்லைன் ஷாப்பிங்கில் பிரிட்ஜ், டிவி உள்ளிட்ட பொருட்களை வாங்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் டெலிவரி வேன்கள் இயங்க முறையான அனுமதி பெற்றே இயங்க முடியும் எனக் கூறப்படுகிறது.







