நடிகர் நிழல்கள் ரவி சினிமா உலகிற்கு வந்து 40 ஆண்டுகள் ஆகிவிட்டது. இன்னும் அவர் பல தரப்பட்ட வேடங்களில் நடித்து வருகிறார். வித்யாசமான வில்லன், காமெடியன், குணச்சித்திரம், ஹீரோ என பல்வேறு வகையான நடிப்புகளை அன்றுமுதல் இன்றுவரை திரையில் பிரதிபலித்து வருகிறார். சமீபத்தில் அவர் டூரிங் டாக்கீஸ் சேனலுக்கு பேட்டி கொடுத்துள்ளார்.
இவர் பல வருடங்கள் முன் வந்த மாப்பிள்ளை படத்தில் வில்லனாக நடித்தார். ரஜினிகாந்த், அமலா, கதாநாயகியாக நடித்த சூப்பர் ஹிட் படம் இது. இப்படத்தில் வில்லனாக நடித்த நிழல்கள் ரவி அடிக்கடி நீட்டே என்று சொல்லிக்கொண்டே இருப்பார். உண்மையில் படத்தில் சீவிருவேன் என ஸ்டைலாக வசனம் பேசணுமாம் நிழல்கள் ரவி அவர் காரில் வந்து கொண்டிருக்கும்போது முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தியின் படத்துடன் நீட் காங்கிரஸ் நீட் காங்கிரஸ் என போஸ்டர் ஒட்டப்பட்டிருந்ததாம். இதை பார்த்த நிழல்கள் ரவி மாப்பிள்ளை படத்தில் எதையாவது வித்தியாசமாக செய்தால் என்ன என நினைத்து சீவிடுவேன் என்ற டயலாக்கை தவிர்க்க நினைத்திருக்கிறார். இதை மனதில் வைத்த நிழல்கள் ரவி , ரஜினியும், ஸ்ரீவித்யாவும் நீண்ட காட்சிகளில் பேசி முடித்த பிறகு நிழல்கள் ரவியை பேச சொல்லி இருக்கிறார்கள் அவரோ சொல்லி கொடுத்த டயலாக்கை சொல்லாமல் நீட்டே என்று இருக்கிறார். எல்லோரும் விவரம் தெரியாமல் குழம்பி இருக்கிறார். மாப்பிள்ளை படத்தின் இயக்குனர் ராஜசேகர் நிழல்கள் ரவியை கடிந்து கொண்டாராம் என்ன ரவி எவ்வளவு பிலிம் வேஸ்ட் ஆயிடுச்சு பாருங்க இப்படி சொதப்பிட்டிங்களே என கூறினாராம். பின்னர் ரஜினிகாந்த் தான் விஷயத்தை கேள்விப்பட்டு இதுவே நல்லாருக்கு ரவி என்று சொல்லி அந்த டயலாக்கையே பேச சொல்லிட்டாராம். அது படத்தில் பெரிய ஹிட் ஆகி படம் முடிந்து வெளியே வந்த பல ரசிகர்களும் நீட்டே என்று சொல்லி சென்றார்களாம்.









