தமிழில் வந்த தொலைக்காட்சி தொடர் நாகினி. இந்த தொடர் பெண்களிடம் மிகுந்த வரவேற்பு பெற்றது. இந்த தொடரில் கதாநாயகியாக நடித்தவர் மவுனிராய்.
இவர் சில வருடங்களாக சூரஜ் நம்பியார் என்ற தொழிலதிபரை காதலித்து வந்தார்.கொரோனா காலத்தில் அவருடன் தான் இவர் வசித்து வந்தார்.
கடந்த சில நாட்களுக்கு முன் தனது நிச்சயதார்த்த மோதிரம் அணிந்த புகைப்படத்தை வெளியிட்டார்.விரைவில் இவருக்கு திருமணம் நடக்க இருப்பதாக அவரது உறவினர் ஒருவர் சமூக வலைத்தளத்தில் கருத்து தெரிவித்திருந்தார்.
திருமணம் துபாய் அல்லது இத்தாலியில் நடக்குமாம். வரவேற்பு சொந்த ஊரான பாட்னாவில் நடக்க இருக்கிறது.







