டெல்லியில் நேற்று நடைபெற்ற தேசிய விருது வழங்கும் விழாவில் இசையமைப்பாளர் இமானுக்கு கண்ணான கண்ணே பாடலுக்கு சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருது கிடைத்தது.
இந்த சூழ்நிலையில் விருது வாங்கிவிட்டு வெளியே வந்த இமானிடம் தேசிய விருது குறித்து கேட்டபோது, விருது வாங்க வேண்டும் என நான் எப்போதும் உழைத்தது இல்லை. ஆனால் வந்தால் ஓக்கே வராவிட்டால் ஒண்ணும் பிரச்சினையில்லை.
ஒவ்வொரு பாடலும் உருவாகும்போதும் நான் அளவற்ற மகிழ்ச்சியடைகிறேன் இதுவரை 500 பாடல்கள் மெட்டு அமைத்திருப்பேன் அதனால் நான் 500 தடவைக்கும் மேல் சந்தோஷமாக இருந்திருப்பேன் என இமான் கூறியுள்ளார்.
அண்ணாத்த படம் சிறப்பாக வந்திருக்கிறது இந்த விருதை வாங்க வரும் முன்பு கூட அண்ணாத்த படத்தின் பைனல் ரீ ரிக்கார்டிங்கை முடித்து கொடுத்துவிட்டுதான் வந்திருக்கிறேன் என இமான் கூறியுள்ளார்.
எனக்கு ஒரு பாடலை முடித்து கொடுத்துவிட்டு நிம்மதியாக தூங்கணும் அது மட்டும்தான் நினைப்பேன் என இமான் கூறியுள்ளார்.







