மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் வருடா வருடம் நடக்கும் சித்திரை விழாவின் முக்கிய நிகழ்வு மதுரை மீனாட்சி திருக்கல்யாணம். இந்த விழாவில் மதுரை மக்கள் அனைவரும் கலந்து கொண்டு கோலாகலமாக சிறப்பிப்பார்கள்.
திருமணத்தில் கலந்து கொண்டவர்களுக்கு மதியம் கோவிலில் நடக்கும் விருந்து மட்டுமே மிகப்பெரிய அளவில் களை கட்டும்.
விழாவுக்கு சென்றவர்களே விருந்து சமைப்பதற்கும் பரிமாறுவதற்கும் அனைத்து உதவிகளையும் செய்வார்கள்.
இன்றும் திருக்கல்யாண விழா நடைபெற்ற நிலையில் பக்தர்கள் இல்லாதது ஒரு பெரும் குறையாக பார்க்கப்படுகிறது.
கொரோனா தொற்று காரணமாக பக்தர்கள் திருக்கல்யாணத்திற்கு அனுமதிக்கப்படாதது கவலை அளிக்கும் விசயமாக உள்ளது.
இருப்பினும் திருக்கல்யாணம் கண்ட மீனாட்சி சொக்கநாதரை குறிப்பிட்ட நேரங்களில் உரிய பாதுகாப்பு விதிமுறைகளுடன் சென்று தரிசிக்க கூறப்பட்டுள்ளது.













