விஜயகாந்த் நடிப்பில் கடந்த 1991ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் மாநகர காவல். விஜயகாந்துக்கு மிகப்பெரிய வெற்றிப்படமாய் இப்படம் அமைந்தது.
விஜயகாந்த், ஆனந்தராஜ், ரூபிணி, சுமாரங்கநாத் உள்ளிட்டோர் நடித்திருந்த இப்படம் நாட்டின் பிரதமரை கொலை செய்ய துடிக்கும் ஒரு கும்பலை போலீஸ் அதிகாரியான விஜயகாந்த் அந்த திட்டத்தை தடுத்து கொலையாளிகளை பிடிப்பதுதான் கதை.
ஏவிஎம் நிறுவனத்தின் 150வது படமாக இப்படம் உருவானது. இப்படத்தை இயக்கியவர் தியாகராஜன் இவர் இன்று காலை ஏவிஎம் ஸ்டுடியோ அருகே தெருவோரத்தில் இறந்து கிடந்திருக்கிறார்.
மிகப்பெரிய இயக்குனர் இப்படி இறந்து கிடந்தது பலரை கவலையடைய செய்துள்ளது.









