அந்தக்கால படங்களில் காமெடி வேடத்திலும் குணச்சித்திர வேடங்களிலும் நடித்தவர் ஒய்.ஜி மகேந்திரன். தற்போது வெளியாகி இருக்கும் மாநாடு படத்தில் முக்கியமான ஒரு வேடத்தில் நடித்து அனைவரையும் கவர்ந்து இழுத்திருக்கிறார்.
இதனால் ஒய்.ஜி மகேந்திரன் பாராட்டு பெற்று வருகிறார். இந்த மாநாடு படத்தின் வாய்ப்பு எனக்கு தயாரிப்பாளர் சுரேஷ் காமட்சி மூலம் கிடைத்தது என இவர் சொல்லி இருக்கிறார்.
20 வருடங்களாக அவரை எனக்கு தெரியும் பல இடங்களில் நாங்கள் இசை நிகழ்ச்சி நடத்தி இருக்கிறோம் அதனால் இந்த ரோல் குறித்து வெங்கட் பிரபு சொல்லிய உடன் என்னைத்தான் சுரேஷ் காமாட்சி பரிந்துரைத்திருக்கிறார்.
நான் 5 நாள் நடித்ததுதான் ஆனால் முதல் நாள் ஷூட்டிங்குக்கு சென்று இறங்கினால் அன்னிக்குத்தான் லாக் டவுன். இப்படி பல சோதனைகளை சந்தித்துதான் இந்த படம் வெளிவந்திருக்கிறது என அவர் கூறியுள்ளார்.







