---Advertisement---

வெளிநாட்டிலிருந்து திரும்பிய மனைவி – வீட்டில் 2 வது மனைவியுடன் கணவன் – காவல் நிலையத்தில் பஞ்சாயத்து

By Sri
Published on: August 22, 2019
---Advertisement---

சென்னை தி.நகரில் வசித்து வருபவர் சரண்குமார்(35). இவர் பிரசாந்தி என்கிற பெண்ணை கடந்த 2010ம் தேதி திருமனம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. ஆனால், கருத்து வேறுபாட்டின் காரணமாக கடந்த 2014ம் ஆண்டு முதல் இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். பிரசாந்தி தனது மகளுடன் தனியாக வசித்து வந்தார்.

இந்நிலையில், ஒரு மேற்படிப்பிற்காக பிரசாந்தி 2016ம் ஆண்டு வெளிநாடு சென்றார். எனவே, மகளை கணவரிடம் விட்டு சென்றார். 3 ஆண்டுகள் கழித்து இந்தியா திரும்பிய அவர் சென்னை தி.நகரில் உள்ள தனது கணவரின் வீட்டிற்கு சென்றார். அப்போது, அங்கு ராதா என்கிற பெண் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அவரை சரண்குமார் 2வது திருமணம் செய்து வாழ்ந்து வந்தது அவருக்கு தெரியவந்தது.

எனவே, இதுபற்றி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.விசாரணையில், பிரசாந்தியை விவாகரத்து செய்துவிட்டது போல் போலி ஆவணங்களை தயார் செய்து ராதாவை சரண்குமார் திருமணம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.