லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வந்த மாநகரம் படம் பெரும் வெற்றி பெற்றது. முதல் படம் என்பதாலும், பெரிய நட்சத்திர பட்டாளங்கள் இல்லாத காரணத்தாலும் பெரிய அளவில் வெளியே தெரியவில்லை.
இருப்பினும் யார் இவர் என பலரை திரும்பி பார்க்க வைத்தது, மக்களின் அந்த பார்வையால் இவர் பெரிய இயக்குனர் அந்தஸ்தை பிடித்தார். கார்த்தி நடித்த கைதி படத்தை இயக்கியும் பெரும் வரவேற்பு பெற்றார்.
கடந்த தீபாவளிக்கு வெளியான படங்களில் கைதி தான் அதிக வரவேற்பு பெற்றது.
இந்நிலையில் விஜயை வைத்து மாஸ்டர் படத்தை இயக்கி வந்தார் லோகேஷ் அப்படத்தின் படப்பிடிப்பும் முடிவடைந்து படம் ரெடியாகி விட்டது கொரோனா குழப்பங்களால் தியேட்டர் இன்னும் திறக்கப்படாத நிலையில் விஜய்யின் ரசிகர்கள் அவரின் பஞ்ச் டயலாக் போல் ஐயாம் வெய்ட்டிங் என காத்துக்கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில் அடுத்த படம் இயக்க தயாராகிறாராம் லோகேஷ் அதை இன்று மாலை அறிவிக்க இருக்கிறாராம் அதை தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
I'm very happy to let you guys know that the Announcement of my next directorial venture will be out tomorrow at 6pm!
— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) September 15, 2020
I'm very happy to let you guys know that the Announcement of my next directorial venture will be out tomorrow at 6pm!
— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) September 15, 2020







