தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான லோகேஷ் கனகராஜ் (Lokesh Kanagaraj), சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தன் மீதான இணைய வழி விமர்சனங்கள் மற்றும் ட்ரோல்கள் குறித்து மிக இயல்பாகப் பேசி உள்ளார். இவரின் இந்தப் பேட்டி தற்போது சமூக வலைதளங்களில் சினிமா வட்டாரத்தில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
சமூக வலைதளங்களில் வரும் ட்ரோல்களை எவ்வாறு கையாளுகிறிர்கள்? என்ற கேள்விக்குப் பதிலளித்த அவர், “என் தாயே எனக்கு அந்த ட்ரோல்களை வாட்ஸ்அப்பில் அனுப்புகிறார்! இதில் டென்ஷன் அடைய என்ன இருக்கிறது? நமது வேலை சரியாக இருந்தால் மக்கள் கொண்டாடுவார்கள். எங்கேனும் சிறு தவறு நடந்தால் அதுவே ட்ரோலாக மாறிவிடும். எனது முந்தைய படங்களான ‘லியோ’ (Leo) மற்றும் ‘கூலி’ (Coolie) ஆகிய படங்களில் சில குறைகள் இருந்தன. அதனால் தான் அப்படிப்பட்ட சூழ்நிலைகள் உருவாகின. அதனை நான் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை” என்று வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், அடுத்ததாக ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன் (Allu Arjun) இயக்கத்தில் உருவாகும் ‘AA23’ திரைப்படத்தின் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். அப்படத்தின் மீது தனக்கு முழு நம்பிக்கை இருப்பதாகவும், படம் திரைக்கு வந்ததும் இந்தத் ட்ரோல்கள் அனைத்தும் தானாகவே நின்ற போய்விடும் என்றும் லோகேஷ் கனகராஜ் மிகுந்த நம்பிக்கையுடன் கூறியுள்ளார்.













