BCCI
BCCI

பரிசுத் தொகையை பங்கு பிரித்து கொடுத்த பிசிசிஐ!…யாருக்கு எவ்வளவு தெரியுமா?…

2007ம் ஆண்டிற்கு பிறகு இருபது ஓவர் கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்று அசத்தியது இந்திய அணி. அமெரிக்க, மேற்கு இந்தியத் தீவுகளில் சமீபத்தில் நடந்து முடிந்தது இருபது ஓவர் கிரிக்கெட் போட்டிகள். ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி இதில் பங்கேற்றது.

எதிரணிகளுக்கு கடும் நெருக்கடி தரக்கூடிய அணிகளாக கருதப்படும் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், இருபது ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் அபாயகரமான அணியாக பார்க்கப்படும் மேற்கு இந்தியத் தீவுகள் போன்ற அணிகள் அரை இறுதி போட்டிகளுக்கு கூட தகுதி பெறாமல் தொடரிலிருந்து வெளியேறியது.

கத்துக்குட்டி அணியாக பார்க்கப் பட்ட ஆப்கானிஸ்தான் அணி அரை இறுதி வரை முன்னேறி அதிர்ச்சி கொடுத்தது. சர்வதேச உலகக் கோப்பை போட்டிகளில் முதல் முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது தென்னாப்பிரிக்க அணி.

இப்படி பல விதமான திருப்பங்களை சந்தித்தது நடந்து முடிந்த 2024 இருபது ஓவர் உலகக் கோப்பை.

T20 World Cup
T20 World Cup

பலமிக்க தென்னாப்பிரிக்க அணியை எதிர்கொண்ட இந்திய அணி கடைசி ஓவர் வரை அபாரமாக ஆடி கோப்பையை வென்றது. கோப்பையோடு தாயகம் திரும்பிய இந்திய அணிக்கு உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது.

இந்திய கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக அணி வீரர்களை உற்சாகப்படுத்தும் விதமாக அதிகபட்ச தொகையாக 125கோடி ரூபாயை பரிசாக அளித்தது இந்திய கிரிக்கெட் வாரியம்.

இந்த நூற்றி இருபத்தி ஐந்து கோடி ரூபாயில் யார் யாருக்கு எவ்வளவு என்ற விவரம் தற்போது வெளியாகி உள்ளது. இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்ட பதினைந்து வீரர்களுக்கு 5 கோடி ரூபாயும், அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்கும் ஐந்து கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.

அதேபோல உதவியாளர்கள், பிசியோதெரபிஸ்ட், ட்ரெயினர்களுக்கு இரண்டு கோடி ரூபாயும், ரிசர்வ் வீரர்களுக்கு நாலு கோடி ரூபாயும், தேர்வுக் குழுவினருக்கு தலா ஒரு கோடி என பிரித்துக் கொடுக்கப்பட்டுள்ளது.