---Advertisement---

லலிதா ஜுவல்லரி கொள்ளையன் முருகன் ஜெயிலில் உயிரிழப்பு

Published on: October 27, 2020
---Advertisement---

திருச்சி மாநகரின் சந்திரம் பேருந்து நிலையத்திற்கருகில் தமிழகம் முழுவதும் செயல்படும் லலிதா ஜுவல்லரி நகைக்கடையின் கிளை உள்ளது. இந்த கிளையில் கடந்த 2019 அக்டோபரில் பின்புறம் துளையிட்டு கோடிக்கணக்கான நகைகள் களவாடப்பட்டன. இது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுவரை எத்தனையோ திருட்டுக்கள் நடந்திருந்தாலும் சினிமாவில் வருவது போல பின்புறம் பெரிய துளையிட்டு திருடியது பரபரப்பை ஏற்படுத்தியது.

இவ்வழக்கில் குற்றவாளியை பிடிப்பது போலிசுக்கு சவாலாக இருந்தாலும் , இது போல செயல்களை இவன் தான் செய்ய முடியும் என திருவாரூரை சேர்ந்த முருகன் என்ற கொள்ளையனை தேடி வந்தனர்.

ஒரு கட்டத்தில் திருவாரூரில் வாகனசோதனையின்போது முருகன் கூட்டாளிகள் போலீசாரிடம் வசமாக சிக்கி கொண்டனர்.முருகனும் பெங்களூரு நீதிமன்றத்தில் சரணடைந்தான். திருச்சி அழைத்து வரப்பட்ட முருகன் ஊருக்கு ஒதுக்குப்புறமாக மலம் கழிக்கும் இடத்தில் நகைகளை குழி தோண்டி புதைத்து வைத்திருந்தான் நகைகள் அனைத்தும் மீட்கப்பட்டன.

கொள்ளையடித்த பணத்தில் செய்யக்கூடாத பல தவறுகளை செய்து சந்தோஷமாக வாழ்ந்து வந்த முருகன் ஹெச் ஐ வி நோயால் பாதிக்கப்பட்டான்.

முருகன் மீது கர்நாடகாவில் – 72 வழக்குகள், தமிழகத்தில் – 17 வழக்குகள், ஆந்திராவில் – 4 வழக்குகள் என பதிவானவை மட்டும், 93 வழக்குகள். இதில் பல வழக்குகளில் முருகன் தண்டனை பெற்றுள்ளார்.

அக்கா மகன் சுரேஷுன் இணைந்து சினிமா எடுக்க முயற்சித்த  முருகனுக்கு நடிகைகள் தொடர்பு, போலீஸ் அதிகாரிகளுடன் தொடர்பு என்றும் தகவல்கள் வெளியாகின. முருகனிடமிருந்து போலீஸ் அதிகாரிகள் லஞ்சம் வாங்கிய விபரமும் வெளியானது. இது குறித்தும் போலீசார் ஒருபக்கம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சி வழக்குககளில் முருகனுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஜாமீன் கிடைத்தது. ஆனாலும் பிற வழக்குகளால் விடுதலை ஆக முடியாத நிலை இருந்தது.

இந்நிலையில், முருகன் கடந்த சில மாதங்களாகவே உடல் நலக்குறைவாக இருந்தார். பெங்களூரு சிறையில் இருந்த அவர் உடல்நலம் மிகவும் மோசமானதால்  அங்குள்ள அரசு  மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை 4 மணியளவில் முருகன் உயிரிழந்தார்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Actor Sivakarthikeyan meeting with Tamil Nadu Chief Minister C. Joseph Vijay.

A bond that continues forever: சிவகார்த்திகேயன் – முதல்வர் விஜய் சந்திப்பு: நெகிழ்ச்சியில் திரையுலகம்!

News update regarding Shalini Ajith Kumar presenting Ajith Kumar's new film AK64, marking his entry into production.

Shalini Ajith Kumar to present AK64: ஷாலினி அஜித் குமார் தயாரிக்கும் ஏகே 64! அஜித்தின் புதிய அவதாரத்தில் அதிரடி ஆரம்பம்!

Actor Arulnithi discussing the film 'Eetti' that he regrets missing out on during a recent interview.

Arulnithi Regret: அருள்நிதி வருத்தம்: அவர் தவறவிட்ட அதர்வாவின் அந்தப் படம்!

'மண்டாடி' திரைப்படத்தின் அதிரடி ப்ரோமோ பாடல் வெளியீடு குறித்த அப்டேட்டைப் பகிர்ந்துள்ள நடிகர் சூரி மற்றும் படக்குழுவினர்.

Mandaadi Promo Song Update: சூரி – சுஹாஸ் மோதல்: ஜூலை 18-ல் ‘மண்டாடி’ ப்ரோமோ பாடல்! செப்டம்பர் 10-ல் திரைக்கு வருகிறது!

Director and actor Pari Elavazhagan discussing his future projects and Anbe Diana release.

‘அன்பே டயானா’ வெளியீட்டுக்குத் தயார்! திருவண்ணாமலை பின்னணியில் அடுத்த படம், தயாரிப்புத் திட்டம் என அசத்தும் பாரி இளவழகன்!

Jason Sanjay, son of Vijay, potentially entering acting.

நடிகராக அவதாரம் எடுக்கும் ஜேசன் சஞ்சய்! புதிய படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார்? கோலிவுட்டில் கிளம்பிய பரபரப்பு!