அனைத்து சாதியினரும் அர்ச்சகர்களாக வேண்டும் என்ற கோரிக்கை தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்களில் கடந்த சில காலங்களாக வலுத்து வருகிறது. கேரளா இதில் முந்திக்கொண்டுள்ளது முறைப்படி வேதம் படித்த ஒரு பட்டியல் இனத்தவரை கடந்த மாதமே ஒரு கோயிலில் அர்ச்சகராக நியமித்தது.
19 பேர் தேர்வாகி இருந்த நிலையில் ஒருவர் மட்டும் முன் மாதிரியாக அர்ச்சகராக நியமிக்கப்பட்டிருந்தார் இப்போது திருவாங்கூர் தேவசம் போர்டின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் பட்டியல் இனத்தை சேர்ந்த முறைப்படி வேதம் பயின்ற 19 அர்ச்சகர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக கேரள மாநில அறநிலையத்துறை அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் கூறியுள்ளார்.













