கடந்த 1960ம் ஆண்டு ஜெமினி நடிப்பில் வெளிவந்த திரைப்படம் களத்தூர் கண்ணம்மா. இந்த திரைப்படத்தில் ஜெமினியுடன் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி நடித்து மக்களை கவர்ந்தவர் கமல்ஹாசன்.
அதன் பின் கமலுக்கு இன்று வரை ஏறுமுகம் தான் திரைத்துறையில் கமல் செய்த சாதனைகளை எழுதவோ அளவிடவோ முடியாது. அவ்வளவு இருக்கிறது அவரைப்பற்றி சொல்ல.
நடிப்பு என்றால் சிவாஜிக்கு பிறகு கமல்ஹாசனைத்தான் சொல்ல வேண்டும் அந்த அளவு கமலின் நடிப்பு பிரபலம்.
உலக அளவில் கமல்ஹாசனை தெரியாதவர்களே கிடையாது. அதனால்தான் முதன் முதலில் இயக்குனர் கே.எஸ் ரவிக்குமார் உலக நாயகன் என்ற அடைம்மொழியை கமலுக்கு சூட்டினார்.
தற்போதும் பிஸியாக வித்தியாசமான கதைக்களத்தில் விக்ரம் படத்தில் நடித்து வருகிறார் கமல். இவர் நடிக்க வந்து இன்றோடு 62 வருடங்கள் ஆயிற்று.







