கடந்த அதிமுக ஆட்சிகளில் சட்ட அமைச்சராகவும், மீன்வளத்துறை அமைச்சராகவும் , சபாநாயகர் ஆகவும் பதவி வகித்தவர் ஜெயக்குமார். இவர் சில நாட்களுக்கு முன் திமுக பிரமுகர் ஒருவரை கள்ள ஓட்டு போட்டார் என்ற காரணத்துக்காக கையை கட்டி அரை நிர்வாணமாக இழுத்து சென்று போலிசிடம் ஒப்படைத்த வீடியோ வைரலானது.
இது தொடர்பாக அமைச்சர் ஜெயக்குமார் மீது போலீசில் வழக்கு பதியப்பட்டது. இதன்படி ஜெயக்குமார் மீது 10 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு நேற்று இரவு கைது செய்யப்பட்டார்.
இது தொடர்பாக முன்னாள் முதல்வர் எடப்பாடி, பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலை ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.













