இந்தோனேஷியா நாட்டின் புதிய தலைநகராக நுஷாந்த்ரா உருவாக்கப்பட்டு வருகிறது. தற்போதைய இந்தோனேஷியாவின் தலைநகராக ஜகார்தா நகரம் செயல்பட்டு வருகிறது.
இந்த நிலையில் தலைநகர் ஜகார்தாவில் இருந்து போர்னியோ தீவிற்கு தலைநகரத்தை மாற்ற அந்த நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.
தற்போதைய தலைநகர் ஜகார்தா முற்றிலும் நீருக்குள் மூழ்கி விடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டதை அடுத்து தலைநகரை மாற்றும் முயற்சியில் அரசு தீவிரம் காட்டி உள்ளது.
வரும் 2024க்குள் தலைநகரை உருவாக்க அரசு தீவிரம் காட்டி வருகிறது. இதற்காக இரண்டரை லட்சம் ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தப்பட்டு 466 டிரில்லியன் பட்ஜெட்டில் தலைநகரம் உருவாக்கப்பட்டு வருகிறது.
புதிய தலைநகரத்தின் பெயர் நுசாந்த்ரா என தெரிவிக்கப்பட்டுள்ளது.













