இந்தியாவில் பசுவதை கடந்த பல வருடங்களாக அதிகரித்து வருகிறது. நோயுற்ற பசுக்களை லாரிகளில் நிற்க கூட முடியாமல் கடத்திசெல்லும் அவலம் எல்லாம் தொடர்கிறது. இதனிடையே பசுவதை பற்றி பாரதிய ஜனதாவின் முன்னணி தலைவர்களில் ஒருவரான ஹெச்.ராஜா கூறியதாவது.
பசுவதைக்கு தமிழகத்தில் அனுமதியில்லை. ஆனால் பசுக்களை கொல்வதற்காக கேரளத்திற்கு கடத்தப்படுவதும் தமிழகத்தில் பசுக்கள் கொல்லப்படுவதும் தொடர்கிறது. இனிமேலாவது தமிழக அரசு பசுக்களை கடத்துபவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்து பசுக்களை கடத்தும் லாரிகளை கைப்பற்றி அழித்துவிட வேண்டும்.













