மணமகளிடம் பத்திரத்தில் கையெழுத்து வாங்கிக் கொண்டு மணமகனின் நண்பர்கள் செய்த சேட்டை தொடர்பான வீடியோவானது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
திருமணம் முடிந்துவிட்டாலே அந்த பையனுக்கு கால் கட்டு போட்டாச்சு என்பார்கள். அது நூற்றுக்கு நூறு உண்மையான வார்த்தை. திருமணத்திற்கு முன்புவரையில் எந்த கட்டுப்பாடும் இல்லாமல் சுற்றித்திரிந்த பலர் திருமணத்திற்கு பிறகு வேலை, வீடு, குடும்பம் என்று தொடர்ந்து ஒரு சிறிய வட்டத்திற்குள் முடங்கி விடுகிறார்கள்.
திருமணத்திற்கு முன்பு ஊர் சுற்றியது போலவும் நண்பர்களுடன் ஜாலியாக விளையாடியது போலவும் எங்கேயும் செல்ல முடிவதில்லை. ஏனென்றால் மனைவிமார்கள் அனுமதி கொடுப்பதில்லை என்று பலரும் புலம்புவது உண்டு. மனைவிமார்கள் கணவர்கள் எங்கேயாவது செல்ல வேண்டும் என்று அனுமதி கேட்டால் போதும் உடனே எங்க போறீங்க.. பேசாம வீட்ல இருங்க என்று அதற்கு அவர்களை வீட்டுக்குள்ளேயே முடக்கி வைத்து விடுகிறார்கள் என்று கணவன்மார்கள் தவிக்கும் நிலைமை உருவாகி இருக்கின்றது.
இது போன்ற சிக்கல் எதுவும் ஏற்படக்கூடாது என்பதற்காக தற்போது திருமணமான மாப்பிள்ளைக்கு தடை போடக்கூடாது என்று மணப்பெண்ணிடம் அவரின் நண்பர்கள் பத்திரத்தில் எழுதி வாங்கிய சம்பவம் அரங்கேறி இருக்கின்றது. தென்பாதி கிராமத்தை சேர்ந்த நபர் முத்துக்குமார். இவர் இன்ஜினியரிங் முடித்துவிட்டு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகின்றார்.
இவருக்கும் குறிஞ்சிப்பாடி கிராமத்தை சேர்ந்த பவித்ரா என்பவருக்கும் திருமணம் செய்யப்பட்டு திருமணம் நடைபெற்றது. திருமணத்தில் பங்கேற்ற நண்பர்கள் முத்துக்குமாருக்கு திருமணமானதால் அவரை முன்பு போல் சுதந்திரமாக வெளியில் சுற்ற முடியாது என்று யோசித்த நண்பர்கள் நூறு ரூபாய் பத்திரம் ஒன்றை ரெடி செய்து திருமணத்திற்கு பிறகு எப்போதும் போல் நண்பர்களுடன் சேர்ந்து வெளியில் செல்வதற்கும் சுற்றுலா செல்வதற்கும் தடை விதிக்காமல் நண்பர்களுடன் சந்தோஷமாக வெளியில் சுற்றுவதற்கு தடையாக இருக்கும் என்று கூறி மணப்பெண் இடம் கையெழுத்து வாங்கி இருக்கிறார்கள். திருமணம் முடிந்த கையோடு பத்திரத்தில் கையெழுத்து வாங்கிய வீடியோவானது இணையத்தில் வைரலாகி வந்தது.













