---Advertisement---

துப்புரவு பணிக்கு விண்ணப்பித்த 4 ஆயிரம் பொறியல் பட்டதாரிகள் – தலைவிரித்தாடும் வேலையில்லா திண்டாட்டம்

By Sri
Published on: September 28, 2019
engineering
---Advertisement---

தமிழக அரசின் 14 துப்புரவு பணிக்கு ஆயிரக்கணக்கான பட்டதாரிகள் விண்ணப்பித்த விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் லட்சக்கணக்கான பொறியியல் பட்டதாரிகள் படிப்பை முடித்து விட்டு வெளியே வருகிறார்கள். ஆனால், அவர்களுக்கு வேலை கிடைப்பதில்லை. எனவே, அவர்கள் கிடைக்கும் வேலையை செய்யும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.

சென்னையில் உள்ள தலைமை செயலகத்தில் 10 பெருக்குபவர்கள், 11 துப்புரவு பணியாளர்கள் பணியாளர்கள் என 14 காலிப்பணியிடங்களுக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அறிவிப்பு வெளியானது. இதனையடுத்து பி.இ. எம்.இ. பி.டெக். எம்.டெக் என பொறியியல் பட்டதாரிகள் சுமார் 4 ஆயிரத்து 607 பேர் விண்ணப்பம் செய்தனர். அவர்களுக்கு கடந்த 23ம் தேதி முதல் நேர்காணல் பணியும், சான்றிதழ் சரிபார்ப்பு பணியும் நடைபெற்று வருகிறது.

படிப்பறிவே தேவையில்லாத துப்புரவாளர் பணிகளுக்கெல்லாம் பொறியியல் பட்டதாரி இளைஞர்கள் விண்ணப்பிக்கிறார்கள் எனில் நாட்டில் எவ்வளவு வேலை இல்லா திண்டாட்டம் தலை விரித்தாடுகிறது என்பதை புரிந்து கொள்ளலாம்.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.