இவ்வுலகில் மனித நேயம் குறைந்து அநியாயம் அக்கிரமம் பெருகி வருகிறது என்பதை பல்வேறு தருணங்களில் வெளிப்பட்டு வருகிறது. வாய் பேச முடியாத பிராணியை மனிதன் மிகவும் கொடுமைப்படுத்தி வருகிறான் எல்லா உயிரினங்களை உணவுக்காக கொன்று தின்று வருகிறான் பெரிய பேரழிவை இறைவன் உலகுக்கு கொடுத்தாலும் யாரும் திருந்த மாட்டேன் என்பது பெரும் கொடுமை.
கேரளாவில் இப்படித்தான் யூசுப் என்பவர் தான் வளர்த்து வந்த நாய் மீது குடும்ப உறுப்பினர்கள் புகார் கூறியதால் அதை தனது காரில் கட்டி இழுத்து சென்றுள்ளார். 600 மீட்டர் தூரம் வரை சென்ற நாய்க்கு காயம் ஏற்பட்டது.
இதையறிந்த காவல்துறை அந்த நபரை கைது செய்துள்ளது. கடந்த 2019 வெள்ளத்தின்போது யூசுப் வீட்டிற்கு அடைக்கலம் தேடி அந்த நாய் வந்துள்ளது. அவர்கள் அதை வளர்க்க விரும்பவில்லை. இருப்பினும் நாய் வேறு எங்கும் செல்லாமல், அவர்கள் வீட்டையே சுற்றிச்சுற்றி வந்தது. இதனால் அதை இழுத்து சென்று வேறிடத்தில் விடுவதற்காக யூசுப் இதுபோன்ற கொடூர செயலில் ஈடுபட்டது தெரியவந்தது. விலங்குகள் மீதான கொடுமையை தடுக்கும் சட்டத்தின் கீழ் யூசுப்புக்கு 3 மாதங்கள் வரை சிறைத்தண்டனை கிடைக்கும் என தெரிகிறது.













