பசங்க படத்தின் மூலம் அறிமுகமானவர் இயக்குனர் பாண்டிராஜ். முதல் படத்திலேயே முத்திரை பதித்த இவர் தொடர் படங்களின் மூலம் முன்னணி இயக்குனரானார்.
பசங்க, வம்சம்,கடைக்குட்டி சிங்கம், நம்ம வீட்டு பிள்ளை போன்ற வெற்றிப்படங்களை கொடுத்த பாண்டிராஜ் தற்போது சூர்யாவை வைத்து எதற்கும் துணிந்தவன் படத்தை இயக்கி வருகிறார்.
கடந்த 2 மாத காலமாக தனது சொந்த ஊர் புதுக்கோட்டை பகுதிகள் மற்றும் வெளிப்புற பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது.
இந்த நிலையில் ஷூட்டிங் பிஸியில் இருந்த பாண்டிராஜ் இரண்டு மாத காலத்துக்கு பின் சென்னைக்கு ஆவலுடன் செல்வதாக பாண்டிராஜ் தனது காரில் செல்வது போல புகைப்படம் வெளியிட்டிருக்கிறார்.
2 மாதங்களுக்குப் பிறகு …
சென்னையை நோக்கி ,
ஒரு ஆவலான பயணம் ❤️ pic.twitter.com/74GCZTW9QQ— Pandiraaj (@pandiraaj_dir) September 3, 2021







