தமிழ் சினிமாவில் சிவகார்த்திகேயனை வைத்து ‘எதிர்நீச்சல்’ மற்றும் தனுஷை வைத்து ‘கொடி’ போன்ற சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தவர் இயக்குனர் துரை செந்தில்குமார். சமீபத்தில் இவர் இயக்கத்தில் வெளியான ‘கருடன்’ படம் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. இந்நிலையில், தனது திரைப்பயணத்தில் தான் செய்த சில முக்கியமான தவறுகள் மற்றும் சில சமரசங்கள் குறித்து அவர் ரொம்பவே ஓப்பனாக பேசியிருக்கார். இது இப்போ கோலிவுட் வட்டாரத்துல செம ஹாட் டாபிக்கா போயிட்டு இருக்கு.
முதலில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘காக்கி சட்டை’ படத்தை பற்றி பேசும் போது ஒரு ரகசியத்தை உடைச்சிருக்கார். இந்த கதையை அவர் முதல்ல தனுஷுக்காக தான் எழுதினாராம். ரொம்ப சீரியஸான போலீஸ் ஸ்டோரியா இருந்த இந்த கதையில, சிவகார்த்திகேயன் உள்ள வந்ததும் சில மாற்றங்கள் பண்ண வேண்டியதாயிடுச்சு. அப்போ தான் சிவகார்த்திகேயன் நடிச்ச ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ (VVS) படம் ரிலீஸாகி ஒரு பெரிய பிளாக்பஸ்டர் ஹிட் அடிச்சிருந்தது.
‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ (VVS) படத்தோட மெகா ஹிட்னால, சிவகார்த்திகேயன் கிட்ட இருந்து மக்கள் எல்லாரும் ஒரு என்டர்டெயின்மென்ட் படத்த தான் எதிர்பார்த்தாங்க. இதனால அந்த சீரியஸ் கதையில காமெடி கலக்கணும்னு எல்லாரும் சொன்னாங்களாம். அதுக்காகவே செகண்ட் ஹாஃப்ல மனோபாலா சாரோட கேரக்டரை கொண்டு வந்திருக்காங்க. ஆனா, ஒரு இயக்குனரா அந்த காமெடி டிராக் சேர்த்ததுல இவருக்கு இன்னைக்கும் உடன்பாடு இல்லையாம். கதையை மாத்துனது தப்புன்னு இப்போ வரைக்கும் வருத்தப்படுறாராம்.
தனுஷ் நடிச்ச ‘கொடி’ படத்துலயும் ஒரு பெரிய பிளானிங் சொதப்பல் நடந்திருக்கு. அந்த படத்துல தனுஷ் டபுள் ஆக்ஷன்ல நடிச்சிருந்தாரு. தனுஷ் சார் மினிமம் 80 நாளாவது கால்ஷீட் கொடுப்பாருன்னு நினைச்ச இயக்குனர், கிளைமாக்ஸ் காட்சிகளை அப்புறமா எழுதிக்கலாம்னு கேஷுவலா இருந்திருக்காரு. ஆனா, தனுஷ் சார் செம ஸ்பீடுல வேலை செஞ்சு அந்த மொத்த டபுள் ஆக்ஷன் சீன்களையும் வெறும் 52 நாள்லயே முடிச்சு கொடுத்துட்டாராம்.
தனுஷ் சார் திடீர்னு “செந்தில், நான் இப்போவே அவைலபிளா இருக்கேன், படத்தை முடிச்சுடலாம்”னு சொன்னதும் இயக்குனருக்கு பெரிய ஷாக் ஆகிடுச்சு. இதனால கிளைமாக்ஸையும் அந்த கடைசி 20 நிமிஷத்தையும் இன்னும் கொஞ்சம் பெட்டரா எழுதியிருக்கலாம்னு இப்போ அவர் பீல் பண்றாரு. அந்த தப்புக்கு தனுஷ் சார் காரணம் இல்ல, நான் தான் சரியா பிளான் பண்ணலன்னு தனுஷுக்கு சப்போர்ட் பண்ணி பேசியிருக்காரு துரை செந்தில்குமார்.
இந்த விஷயங்கள் இப்போ சோஷியல் மீடியாவில பெரிய அளவுல விவாதிக்கப்பட்டு வருது. ஒரு இயக்குனர் தன்னோட தப்பை இவ்வளவு தைரியமா ஒத்துக்கிட்டத பார்த்து ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து சொல்லிட்டு வர்றாங்க. இப்போ லெஜண்ட் சரவணன் நடிக்கும் ‘லீடர்’ படத்துல பிஸியா இருக்குற துரை செந்தில்குமார், இனிமே இந்த மாதிரி பிளானிங் சொதப்பல் நடக்காதுன்னு ரொம்ப கான்பிடென்ட்டா சொல்லிருக்காரு. இயக்குனரோட இந்த ஓப்பன் டாக் இப்போ கோலிவுட் பிளாட்ஃபாரத்துல செம வைரல்.













