தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக திரு கே.எஸ் அழகிரி இருந்து வருகிறார். உலகம் முழுவதும் கடந்த மார்ச் மாதம் தொடங்கிய கோவிட்19 என்ற கொரோனா வைரஸால் பலரும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று குறைந்து இருந்தாலும் ஒரு சில முக்கிய தலைவர்களுக்கு வந்து போகத்தான் செய்கிறது.
எஸ்.பிபி, எம்.எல்.ஏ வெற்றிவேல் போன்ற பெருந்தலைகளை கொரோனா தொற்று பழி வாங்கியது.
இந்த சூழ்நிலையில் காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரிக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.













