---Advertisement---

காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தவருக்கு பதவி கொடுத்த காங்கிரஸ்

Published on: December 24, 2020
---Advertisement---

காங்கிரஸ் கட்சி என்ன செய்வதென்று கடும் குழப்பத்தில் இருப்பதாக அறிய முடிகிறது. எல்லா மாநிலத்திலும் பிஜேபி வென்று வருகிறது. வர இருக்கும் தேர்தல்களில் அக்கட்சி என்ன செய்யப்போகிறதென்றே தெரியவில்லை.

சில விசயங்களில் மிகவும் குழப்பமாக நடந்து கொள்கிறது காங்கிரஸ், அப்படி ஒரு சம்பவம்தான் மத்திய பிரதேசத்தில் நடந்துள்ளது.

மத்தியப் பிரதேசத்தில் இளைஞர் காங்கிரஸ் பொறுப்புகளைத் தேர்ந்தெடுக்கும் பணி நடந்து முடிந்து புதிய நிர்வாகிகள் அறிவிக்கப்பட்ட நிலையில்அதில், ஜபால்பூரின் பொதுச் செயலாளர் பதவிக்கு, ஹர்ஷித் சிங்காய் தேர்வு செய்யப்பட்டார்.

ஆனால், அவர் கடந்த மார்ச் மாதமே, காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி, பாஜகவில் இணைந்துவிட்டார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்த ஹர்ஷித் சிங்காய், இளைஞர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பொறுப்புக்கு நான் தேர்வு செய்யப்பட்டிருப்பது நகைப்புக்குரிய விசயம் என கூறியுள்ளார்

காங்கிரஸில் தேர்தல் இப்படித்தான் நடக்கிறது என்று தெரிவித்தார். ‘ஹர்ஷித் சிங்காய் தனது வேட்பு மனுவை வாபஸ் பெறவில்லை’ என்று இளைஞர் காங்கிரஸ் தரப்பில் விளக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க