இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவுப் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் ஆன்லைன் ஷாப்பிங்கில் பணத்தை இழந்துள்ளார் நடிகை.
நடிகை சினேகா உல்லாள் பாலிவுட் படங்களில் நடித்து புகழ்பெற்றவர். இந்நிலையில் இவர் ஊரடங்கின் போது அவர் தங்கள் வீட்டுத் தேவைக்காக ஆன்லைனில் சில பொருட்களை ஆர்டர் செய்துள்ளார். அதற்கான பில் 25,000 ரூபாய் வந்துள்ளது. இந்நிலையில் சம்மந்தப்பட்ட கடையினர் பொருட்களை வீட்டுக்கே அனுப்பி வைப்பதாகவும் பணத்தை அங்கே கொடுத்தால் போதும் என்றும் கூறியுள்ளனர்.
அதன் பின்னர் சில நிமிடங்களில் அவருக்கு மற்றொரு அழைப்பு வர, அதில் கடையில் பொருட்கள் கைவசம் இல்லை என்றும் குடோனில் இருந்துதான் அனுப்ப வேண்டும் என்றும் கூறியுள்ளனர். மேலும் அவரது கிரெடிட் கார்டு விவரங்களையும் கேட்க அவர் அளித்துள்ளார். அடுத்த சில நொடிகளில் அவரது அக்கவுண்ட்டில் இருந்து 25,000 ரூபாய் எடுக்கப்பட்டுள்ளது.
இதனால் அதிர்ச்சியடைந்த அவர் மறுபடியும் அந்த கடைக்கு போன் செய்து கேட்க அவர்கள் இரண்டாவது முறை அழைத்தது தாங்கள் இல்லை என சொல்லியுள்ளனர். அதன் பிறகுதான் தாம் ஏமாற்றப்பட்டுள்ளோம் என்ற உண்மை சினேகாவுக்கு தெரிய வந்துள்ளது.









