உலக அளவில் கொரோனா ஆரம்பித்தாலும் ஆரம்பித்தது. உலக அளவில் பலரும் கொரோனா தொற்றால் மரணித்து வருகின்றனர். தமிழ்நாட்டிலும் சினிமா, அரசியல்துறை என பல முக்கிய ஜாம்பவான்கள் மரணித்து வருகின்றனர்.
இந்த கொரோனா கொடுங்காலத்தில் கொரோனா இல்லாமலும் பலர் வேலையில்லாத கவலை, பணம் இல்லாத கவலை என மனதிற்குள்ளேயே கவலைப்பட்டு அதிக மன அழுத்தத்திற்க்குள்ளாகியும் பலர் இறக்கின்றனர்.
இப்படியாக 2020ல் எதிர்பார்க்க முடியாத மரணங்கள் அதிகமாகி உள்ளது. தினம் ஒரு சினிமா பிரபலமோ, டிவி பிரபலமோ, அரசியல்வாதியோ இறந்து வருகின்றனர்.
கடந்த 19 வருடங்களுக்கு முன் வந்த சித்தி தொடரில் முருகன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து புகழ்பெற்றவர் நடிகர் ரூபன். இவர் ஒரு சில தமிழ் படங்களிலும் நடித்துள்ளார். இவர் ஒரு எழுத்தாளரும் கூட இவர் நேற்று திருச்சியில் உடல்நலக்குறைவால் காலமானார்.







