தமிழில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலமும் இருட்டு அறையில் முரட்டு குத்து போன்ற படங்களின் மூலமும் தமிழ் மக்களிடையே பிரபலமானவர் யாஷிகா ஆனந்த்.
இவர் கடந்த இரு மாதங்களுக்கு முன் மஹாபலிபுரம் சென்று விட்டு காரை வேகமாக ஓட்டி வந்ததால் கார் கவிழ்ந்து நொறுங்கி அதில் இருந்த இவரது தோழி பலியானார்.
இந்நிலையில் மிகவும் கவலையில் டுவிட் எல்லாம் பதிவிட்ட யாஷிகா தற்போது எப்படி இருக்கிறார் என அவரே பதிவிட்டுள்ளார்.
அதில் தன் செல்ல நாயுடன் வார்டில் இருக்கும் யாஷிகா பெரிய கட்டுடன் உள்ளார். எனது வலிமை என்று கேப்ஷன் கொடுத்துள்ளார் இவர். எப்படியும் இவர் உடல்நிலை சரியாவதற்கு 6 மாதங்களாவது ஆகும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.







