மலையாள நடிகர் சங்கம் கடந்த 2008ல் டுவெண்டி டுவெண்டி என்ற படத்தை தயாரித்தது. நடிகர் சங்க வளர்ச்சிக்காக அனைவரும் கூட்டாக சேர்ந்து நடித்து இப்படத்தை தயாரித்தனர்.
இந்நிலையில் நடிகர் சங்கத்தின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு மீண்டும் அதுபோல் பலரும் நடிக்க மலையாள நடிகர் சங்கம் சார்பில் ஒரு படம் தயாரிக்கப்படுகிறது.
கடந்த 2008ல் வந்த படத்தில் மம்மூட்டி, மோகன்லால், சுரேஷ்கோபி, திலீப், பிரித்விராஜ் உள்பட பெரும்பாலான நடிகர்களும், பாவனா, நயன்தாரா, கோபிகா உள்பட முன்னணி நடிகைகளும் நடித்திருந்தனர். இந்தப்படம் அப்போது சூப்பர் ஹிட்டாக ஓடியது. இந்த படத்தில் நடிக்க எந்த நடிகர், நடிகைகளும் சம்பளம் வாங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இதுபோல தயாரிக்கப்படும் படத்தில் நடிக்க பாவனாவுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. சில வருடங்கள் முன் ஏற்பட்ட சில பிரச்சினைகளால் அவர் திருமணம் செய்து செட்டில் ஆகி விட்டார்.
இந்நிலையில் வாய்ப்பு மறுக்கப்பட்டதற்கான காரணத்தை மலையாள நடிகர் சங்க செயலாளர் இடைவேளை பாபு கூறுகையில், ‘‘மலையாள நடிகர் சங்கம் சார்பில் 2வது படம் விரைவில் தயாரிக்கப்பட உள்ளது. இந்தப் படத்தில் முதல்படமான டுவென்டி 20ஐ போலவே அனைத்து முன்னணி நடிகர், நடிகைகளும் நடிக்க உள்ளனர். ஆனால் நடிகை பாவனாவுக்கு இந்த படத்தில் வாய்ப்பு அளிக்கப்பட மாட்டாது. அவர் தற்போது நடிகர் சங்க உறுப்பினராக இல்லை. இறந்தவர் எப்படி திரும்ப வர முடியும்? எனவே அந்த படத்தில் அவருக்கு வாய்ப்பு வழங்க வேண்டாம் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது’ என்றார்.







