முன்னாள் முதல்வர் ஜெ மறைவுக்கு பின் சில காலம் அமைச்சர் பன்னீர்செல்வம் முதல்வராக இருந்தார். பிறகு கட்சியில் ஏற்பட்ட பிளவு அனைவரும் அறிந்ததே சசிகலா ஆதரவு எம்.எல்.ஏக்கள் ஆக இருந்த தற்போதைய எம்.எல்.ஏக்கள் பலர் பிரிந்து போன அமைச்சர் பன்னீர்செல்வத்தின் தரப்பையும் கலந்து ஆலோசித்து அதிமுக கட்சியை ஒன்றாக இணைத்தது. இதனால் கோபமுற்ற சசிகலா ஆதரவாளர் தினகரன் அமமுக என்ற கட்சியை ஆரம்பித்தார் அதன் பின்னால் பலர் சென்றனர்.
எனினும் எம்.எல்.ஏக்கள் எடப்பாடி, பன்னீர்செல்வம் பக்கம் அதிகம் இருந்ததால் அவர்கள் தரப்பு அதிமுக கட்சியை கைப்பற்றியது. முதல்வர், துணைமுதல்வராக எடப்பாடி மற்றும் பன்னீர்செல்வம் இணைந்து செயல்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் அதிமுகவில் பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் லேசாக முதல்வர் பதவி பன்னீர்செல்வத்துக்கு வேண்டும் அவர்தான் அதிமுக முதல்வர் வேட்பாளர் என்று போஸ்டர் கூட அடித்து ஒட்டினர்.
சிறிது நாளாக இந்த குழப்பங்கள் நீடித்து வரும் நிலையில் இன்று கூடிய செயற்குழுவில் அனைவரும் ஏகமனதாக பேசி வரும் 7ம்தேதி முதல்வர் வேட்பாளரை அறிவிக்க இருக்கின்றனராம்.
இதை அமைச்சர் முனுசாமி தெரிவித்துள்ளார்.













