---Advertisement---

கோலம் போட்ட அப்பாவி பெண் கொலை- திடுக்கிட வைக்கும் கொலை பின்னணி

Published on: September 25, 2020
---Advertisement---

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் வாசலில் அதிகாலையில் கோலம் போட்டுக்கொண்டிருந்த அப்பாவி பெண் கொடூரமாக கடந்த வாரம் கொல்லப்பட்டதை செய்தித்தாள்களில் படித்திருப்பீர்கள். பக்கத்து வீட்டில் இருந்த பெண்கள் நீண்ட நேரம் கழித்து வந்து பார்த்த பிறகு கோலம் போட்ட இடத்திலேயே சித்ரா என்ற அந்த பெண் கொடூரமாக கொல்லப்பட்டிருக்கிறார்.

அந்த பெண்ணை கொலை செய்தது அந்த வீட்டின் மாடியிலே தங்கி இருந்த பிருந்தா என்பவள்தான்.

பிருந்தா என்பவள் இறந்து போன சித்ரா வீட்டின் மாடியில் வசித்து வந்திருக்கிறாள். அந்த வீட்டு ஓனர் அம்மாவே சித்ராதான். 3 மாத கைக்குழந்தையுடன் பிருந்தா வசித்து வந்திருக்கிறாள். அவரது கணவர் செல்வக்குமார் வெளிநாட்டில் இருக்க இவளுக்கு சீர்காழியை சேர்ந்த ரியாஸ் என்ற நாகை மாவட்ட விஜய் மக்கள் இயக்க நிர்வாகியுடன் தொடர்பு. ரியாஸ் அடிக்கடி பிருந்தா வீட்டுக்கு வந்து போனதை வீட்டு ஓனர் அம்மா சித்ரா கண்டித்துள்ளார்.

இதனால் கோபமான ரியாஸ் தனது காதலுக்கு இவர் தடையாக இருக்கிறார் என கடும் கோபம் கொண்டு தனது காதலி பிருந்தாவிடம் ஐடியா கேட்டு , பிருந்தாவின் ஐடியா படி அதிகாலையில் வீட்டு வாசலில் கோலம் போட்ட சித்ராவை அடித்தே கொன்றுள்ளான்.

பாவம் எந்த தவறும் செய்யாத ஒரு ஆத்மா இப்படி கொடூரமாக உயிரிழப்பதை எந்த ஒரு மனித மனமும் விரும்பாது. பேரன்புக்கும் தாய்மைக்கும் உதாரணமாக பெண்களை சொல்வதுண்டு பிருந்தா போன்று ஒரு சில பெண்கள் ஏன் இப்படி கொடூர குரூர மனப்பான்மையோடு இருக்கிறார்கள் என தெரியவில்லை.

கண்ணியமாக 4 பேர் இருக்கும் இடத்தில் இப்படி அசிங்கமாக நடந்தால் எல்லோருமே தவறு என்றுதான் சொல்வார்கள். அதுவும் வீட்டு ஓனர் அம்மா சும்மா இருப்பாரா? சாதாரணமான சின்ன விசயங்களையே அட்வைஸ்களையே ஏற்றுக்கொள்ளாவிட்டால் என்ன செய்வது.

இப்போது 3 மாத குழந்தையை தவிக்க விட்டு காதலனுடன் கம்பி எண்ணி கொண்டிருக்கிறாள் பிருந்தா. தவறான வழியில் சென்றால் யாருமே கேட்க கூடாதுன்னு நினைச்சு அதுவும் ஒரு பெண்ணை இன்னொரு பெண்ணே ஐடியா கொடுத்து கொடூரமாக கம்பி கட்டை எல்லாம் கொடுத்து காலையில் கோலம் போடும்போது வந்து கொல் என சொல்வதெல்லாம் உச்சக்கட்ட குரூர ரகம்

எங்கே போகிறோம் நாம். மீடியாக்களிலும், சமூக வலைதளங்களிலும் சென்னை டிக் டாக் அபிராமி போன்ற விசயங்கள் கடுமையாக விவாதிக்கப்பட்ட அளவுக்கு இது விவாதிக்கப்படவில்லை என்பது வருந்ததக்கது.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Mega Power Star Ram Charan starrer sports drama movie Peddi registers a massive opening crossing 100 crore gross worldwide on Day 1.

முதல் நாளே 100 கோடியைத் தாண்டி மரண மாஸ் காட்டிய பெத்தி… தியேட்டர்களில் ராம் சரணின் பாக்ஸ் ஆபீஸ் ருத்ரதாண்டவம்!

Director Chidambaram next Malayalam film Balan The Boy official trailer releasing today evening ahead of June 19 theatrical release.

மஞ்சும்மல் பாய்ஸ் இயக்குநரின் அடுத்த மரண மாஸ் படம்… பாலன் படத்தின் திக் திக் ட்ரெய்லர் இன்னைக்கு சாயங்காலம் ரிலீஸ்!

AGS Entertainment producer Archana Kalpathi clarifying rumors about actor Simbu and director Aswath Marimuthu movie status in a recent interview.

சிம்பு மற்றும் அஸ்வத் மாரிமுத்து படம் டிராப் ஆகிடுச்சா… கிளம்பிய வதந்திகளுக்கு நேர்காணலில் அதிரடியாக முற்றுப்புள்ளி வைத்த அர்ச்சனா கல்பாத்தி!

Tamil actor and director Sasikumar launching the official teaser of Guru Somasundaram starrer Paris Cafe movie tomorrow at 11 AM.

நாளைக்கு காலைல 11 மணிக்கு ஒரு சூப்பர் அப்டேட் வருது… மனசைத் தொடப்போகும் புதிய படத்தின் டீசரை வெளியிடும் சசிகுமார்!

Director Lokesh Kanagaraj motivational quote advising young filmmakers that he made his first short film with just 4000 rupees.

“என் முதல் படத்தை வெறும் 4,000 ரூபாயில்தான் எடுத்தேன்..” புதிய இயக்குநர்களுக்கு லோகேஷ் கனகராஜ் கொடுத்த சீக்ரெட் சக்சஸ் டிப்ஸ்!

Producer KJR Rajesh giving a bold interview about Gen Z crowd backing TVK Vijay, Pradeep Ranganathan, and Blast movie box office success.

“வீட்லதான் உட்காரணும், புதுசுங்க வந்து தூக்கிட்டுப் போயிட்டே இருக்கும்..” பெரிய ஹீரோக்களின் சம்பள திமிரை உடைத்த கேஜேஆர் ராஜேஷ்!