சுப்பிரமணியபுரம் படத்தில் இடம்பெற்ற மதுரை குலுங்க குலுங்க, நாடோடிகள் படத்தில் இடம்பெற்ற ஆடுங்கடா மச்சான் ஆடுங்கடா உள்ளிட்ட கிராமிய பாடல்களை பாடியவர் வேல்முருகன். இவர் புதியதாக கந்த சஷ்டி கவசத்தை ஆல்பமாக பாடியுள்ளார்.
முதன் முதலில் சூலமங்களம் சகோதரிகள் பாடிய கந்த சஷ்டி கவசம்தான் பாடலாக அனைவரிடத்திலும் சேர்ந்தது. பின்பு அதை சீர்காழி கோவிந்தராஜன், வாணி ஜெயராம், சித்ரா, பாம்பே சிஸ்டர்ஸ் என பலரும் பாடிவிட்டனர். இப்போது வேல்முருகனும் தனது குரலில் அதை பாடியுள்ளார்.
மேற்கண்ட பாடல்களில் இதுவரை சூலங்களம் சகோதரிகள் என்ன ராகத்தில் பாடினார்களோ அதே ஃபீலில்தான் வேல்முருகன் வரை பாடியுள்ளனார்.வித்தியாசம் என்னவென்றால் பின்னால் வீடியோவாக வரும் விசுவல் மட்டுமே மாற்றமாக உள்ளது.
இதில் கந்த சஷ்டி கவசத்தை ஒரே ஸ்டைலில் அல்லாமல் வேறு ஒரு ராகத்தில் பாடியவர் மறைந்த பாடகர் சீர்காழி கோவிந்தராஜன் அவர்கள் மட்டுமே.
இதோ வேல்முருகன் பாடிய புதிய கந்த சஷ்டி கவசம்.













