விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் திரைப்படம் கடந்த ஏப்ரல் 14 தமிழ் புத்தாண்டு தினத்தன்றே வெளியீட்டுக்கு தயாராக இருந்தும் கொரோனா ஊரடங்கால் படம் வெளியிடப்படவில்லை.

இந்நிலையில் மாஸ்டர் வெளியீடு குறித்து நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் பல தகவல்கள் வந்து கொண்டே உள்ளன. இப்போது ஓடிடியில் வெளியிடுவது டிரெண்ட் என்பதால் பலமுறை ஓடிடி வெளியிடுவதாக ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டன.
இப்போதும் அதுபோலவே ஒரு செய்தி கசிந்துள்ளது. ஓடிடியில் தீபாவளி அன்று மாஸ்டர் படம் வெளியாகிறது என தகவல் பரவியது. இது குறித்து படக்குழு திட்டவட்டமாக கூறுகையில் , ஓடிடியில் வெளியிடும் எண்ணம் இல்லை என கூறியுள்ளது.
மாஸ்டர்
படத்தைப் பொறுத்தவரை நாங்கள் எடுத்த முடிவில் உறுதியாக இருக்கிறோம். கண்டிப்பாக திரையரங்கில் வெளியாகாமல் ஓடிடி தளத்தில் வெளியாகாது. திரையரங்குகள் திறந்தவுடன் எப்போது வெளியீடு என்பது குறித்து முடிவு செய்ய இருக்கிறோம் என கூறியுள்ளனர்
இவ்வாறு ‘மாஸ்டர்’ படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்









