---Advertisement---

தனியார் ஆய்வகங்களில் கொரோனா சோதனை! அனைவருக்கும் இலவசம் இல்லை!

By Sri
Published on: April 14, 2020
corona
---Advertisement---

கொரோனா சோதனை மேற்கொள்ளும் தனியார் ஆயவகங்களில் அனைவருக்கும் இலவசமாக செய்யவேண்டியதில்லை என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா வேகமாக பரவி வரும் நிலையில் மக்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ய 157 அரசு ஆய்வகங்களும் 67 தனியார் ஆய்வகங்களும் செயல்பட்டு வருகின்றன. தனியார் ஆய்வகங்களில் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள ரூ.4500 மத்திய அரசு கட்டணம் நிர்ணயித்தது. இந்நிலையில் அரசு ஆய்வகங்கள் போல தனியார் ஆய்வகங்களிலும் இலவச பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவின் விசாரணையில் தீர்ப்பளித்த நீதிமன்றம் அனைத்து ஆய்வகங்களிலும் இலவச பரிசோதனை செய்ய வேண்டும் என உத்தரவிட்டது.

இதை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீடு விசாரணைக்கு வந்தது. அதுகுறித்து விசாரித்த நீதிமன்றம் “அனைவருக்கும் இலவச கொரோனா பரிசோதனை செய்ய வேண்டாம். மத்திய அரசின் ஆயுஸ்மான் பார்த் யோஜனா அட்டை வைத்திருப்பவர்களுக்கும், மற்ற சில ஏழைகள் என்பதற்கான சான்றுகள் உள்ளவர்களுக்கும் மட்டும் இலவச சோதனை செய்தால் போதும்” என உத்தரவிட்டுள்ளது.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.