தமிழ் சினிமா உலகில் தனது தனித்துவமான நடிப்பாலும், பரிசோதனை முயற்சிகளாலும் தொடர்ந்து முத்திரை பதித்து வரும் உலகநாயகன் கமல் ஹாசன் அடுத்தடுத்து பல முன்னணி இயக்குநர்களுடன் கைகோர்த்து வருகிறார். தற்போது ‘கல்கி 2898 ஏடி’ படத்தின் இரண்டாம் பாகமான ‘கல்கி 2’ படத்தில் தீவிரமாக நடித்து வரும் அவர், அதனைத் தொடர்ந்து நடிக்கவுள்ள புதிய படம் குறித்த உற்சாகமான தகவல்கள் தற்போது கோலிவுட் வட்டாரத்தில் வெளியாகி உள்ளன. ரசிகர்களை ஆச்சரியப்படுத்தும் வகையில் அமைந்துள்ள இந்த புதிய அறிவிப்பு தற்போது சமூக வலைதளங்களில் அதிகம் பேசப்பட்டு வருகிறது.
நம்பத்தகுந்த சினிமா வட்டாரங்களின் தகவல்பல்படி, ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் ‘தர்மன்’ படத்தைத் தொடர்ந்து, கமல் ஹாசன் தனது அடுத்த திரைப்படத்திற்காக திறமையான இயக்குநர் சு.அருண்குமாருடன் கைகோர்க்கவுள்ளதாகக் கூறப்படுகிறதது. இந்த பிரம்மாண்டமான திரைப்படத்தை உலகநாயகனின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் (RKFI) நிறுவனம் தயாரிக்க உள்ளதாகத் தெரிகிறது. தற்போது கையில் வைத்துள்ள படப்பிடிப்புகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிந்த பிறகு, இக்கூட்டணியின் அதிகாரப்பூர்வப் பணிகள் 2027-ஆம் ஆண்டில் முழு வீச்சில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தொடர்ந்து வித்தியாசமான கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்து வரும் கமல் ஹாசனின் இந்தப் புதிய கூட்டணி சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. வித்தியாசமான திரைக்கதை அமைப்புகளுக்குப் பெயர்போன சு.அருண்குமாரின் இயக்கத்தில் உலகநாயகன் இணையவிருப்பது திரையுலகில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. நீண்ட நாட்களாகத் திரையுலகில் தனது அசுர பலத்தை நிரூபித்து வரும் ஆண்டவர் மீண்டும் தனது வழக்கமான மிரட்டலான கம்பேக் கொடுக்கத் தயாராகி வருவதாக ரசிகர்கள் உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர். படத்தின் ஆரம்ப கட்டப் பணிகள் மற்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளுக்காகக் கோலிவுட் வட்டாரமும் ரசிகர்களும் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கின்றனர்.













