உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்படும் க்ரைம் த்ரில்லர் தொடர்களுக்குத் தமிழ் ரசிகர்களிடையே எப்போதும் தனி வரவேற்பு உண்டு. அந்த வகையில், பாலிவுட் நடிகர் ரன்தீப் ஹூடா (Randeep Hooda) நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘இன்ஸ்பெக்டர் அவினாஷ்’ (Inspector Avinash) தொடரின் இரண்டாம் பாகம் தற்போது வெளியாகத் தயாராகிவிட்டது.
உத்தரப் பிரதேசத்தின் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் அவினாஷ் மிஸ்ராவின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்தத் தொடரின் முதல் பாகம், அதன் ராவான ஆக்ஷன் காட்சிகளுக்காகப் பாராட்டப்பட்டது. தற்போது ஜியோ ஹாட்ஸ்டார் (JioHotstar) தளத்தில் இதன் சீசன் 2, வரும் மே 15, 2026 அன்று வெளியாகிறது.
View this post on Instagram
அவினாஷ் மிஸ்ராவின் அடுத்தகட்ட வேட்டை
“இன்ஸ்பெக்டர் அவினாஷின் ஆட்டம் இனிமேல்தான் ஆரம்பம்” (Inspector Avinash ka khel toh ab shuru hoga) என்ற அதிரடி வாசகத்துடன் இதன் புரோமோக்கள் வெளியாகியுள்ளன. முதல் சீசனில் குற்றவாளிகளை ஒடுக்கத் தனிப்படை அமைத்துப் போராடிய அவினாஷ், இந்த இரண்டாவது சீசனில் இன்னும் வலிமையான நிழலுகு தாதாக்கள் மற்றும் அரசியல் பின்னணி கொண்ட குற்றவாளிகளை எதிர்கொள்ள உள்ளார்.
ரன்தீப் ஹூடாவின் மிரட்டலான நடிப்பு மற்றும் உண்மைக்கு நெருக்கமான திரைக்கதை இந்த முறையும் ரசிகர்களை இருக்கை நுனியில் அமர வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஓடிடியில் அனைத்து எபிசோட்களும் ரிலீஸ்
வழக்கமாக வாரம் ஒரு எபிசோட் வெளியிடும் பாணியைப் பின்பற்றாமல், மே 15 அன்று ஒரே நாளில் அனைத்து எபிசோட்களையும் வெளியிட ஜியோ ஹாட்ஸ்டார் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இது ‘பிஞ்ச் வாட்ச்’ (Binge-watch) செய்யும் ரசிகர்களுக்குப் பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது. கிரைம் த்ரில்லர் விரும்பிகளுக்கு இந்த வார இறுதியில் ‘இன்ஸ்பெக்டர் அவினாஷ் 2’ ஒரு சிறந்த தேர்வாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.













