யூடியூப் மூலம் பிரபலமாகி, தற்போது சினிமாவில் நடிகராகவும் இயக்குநராகவும் வலம் வரும் ‘எரும சாணி’ விஜய் குமார் மற்றும் அவரது மனைவி மீது மலையாள நடிகை அனுராகா எஸ்.நம்பியார் சுமத்தியுள்ள புகார்கள் சமூக வலைதளங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. “என்னை ஏமாற்றிவிட்டார்கள்” என கண்ணீர் மல்க அவர் வெளியிட்டுள்ள வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
View this post on Instagram
அனுராகா தனது புகாரில், ‘ரிசார்ட்’ (Resort) என்ற இணையத் தொடருக்காக, அதன், தயாரிப்பு நிறுவனம் தன்னுடன் ஓராண்டு ஒப்பந்தம் செய்ததாகக் குறிப்பிட்டுள்ளார். ஆனால், ஒப்பந்தம் செய்தபடி படப்பிடிப்புகளை நடத்தாமலும், பேசிய சம்பளத்தைத் தராமலும் தன்னை வஞ்சித்ததாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். “சம்பளம் தராமல் இழுத்தடித்தது மட்டுமன்றி, வேறு படங்களிலும் கமிட் ஆக முடியாதபடி எனது நேரத்தை வீணடித்தனர்” என அவர் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
View this post on Instagram
மேலும், படப்பிடிப்பு தளத்தில் வழங்கப்பட்ட உணவு மிகவும் தரம் குறைவாக இருந்ததாகவும், இதனால் தனது உடல்நலம் பாதிக்கப்பட்டபோது விஜய் குமாரின் மனைவி தன்னை மிகவும் இழிவாகப் பேசியதாகவும் அவர் கூறியுள்ளார். இளம் கலைஞர்களை மிரட்டி வேலை வாங்கும் இதுபோன்ற நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார். இதுவரை விஜய் குமார் தரப்பிலிருந்து இந்தப் புகார்களுக்கு எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை. பிக்பாஸ் மற்றும் பல சினிமா வாய்ப்புகளை எதிர்பார்த்திருக்கும் கலைஞர்கள் இது போன்ற ஒப்பந்தங்களில் கவனமாக இருக்க வேண்டும் என இந்தச் சம்பவம் எச்சரிக்கை விடுத்துள்ளது.













