தமிழ் சினிமாவில் உணர்ச்சிகரமான கதைகளைப் படைப்பதில் வல்லவர் இயக்குனர் சேரன் (Cheran). கடந்த 2023-ம் ஆண்டு கன்னட சூப்பர் ஸ்டார் கிச்சா சுதீப்பின் (Kichcha Sudeep) 47-வது திரைப்படத்தை (#K47) சேரன் இயக்கப்போவதாகவும், அதனைப் பிரபல நிறுவனமான சத்ய ஜோதி பிலிம்ஸ் (Sathya Jyothi Films) தயாரிக்கப் போவதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
ஆனால், சில காரணங்களால் அந்தப் படம் தொடங்கப்படாமல் போனது. பின்னர் சுதீப்பின் 47-வது படமாக விஜய் கார்த்திகேயா இயக்கத்தில் ‘மேக்ஸ்’ (Max) திரைப்படம் வெளியானது. இந்த நிலையில், சேரனுக்கும் சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனத்திற்கும் இடையே தற்போது ஒரு நிதிச் சர்ச்சை வெடித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும், ப்ரீ-புரொடக்ஷன் செலவுகளைக் கேட்டு சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்துள்ளது . சமீபத்திய தகவல்களின்படி, இந்தப் படத்திற்காக இயக்குனர் சேரனுக்கு வழங்கப்பட்ட முன்பணம் (Advance Salary) மற்றும் படத்தின் ஆரம்பக்கட்ட பணிகளுக்காக (Pre-production) செலவு செய்யப்பட்ட தொகையைத் திரும்பக் கேட்டு சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பாளர் சங்கத்தை அணுகியுள்ளது. படம் கைவிடப்பட்டதால், அந்தத் தொகையைத் திரும்பப் பெறுவது நியாயம் எனத் தயாரிப்புத் தரப்பு வாதிடுவதாகக் கூறப்படுகிறது. இந்தச் சட்ட ரீதியான மோதல் எப்படி முடியப்போகிறது என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
இந்நிலையில், ஒரு மூத்த இயக்குனர் மீதான இந்தப் புகார் செய்தி சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.













