தமிழ் சினிமாவில் சின்னத்தம்பி போன்ற பிரம்மாண்ட வெற்றிகளைக் கொடுத்த இயக்குனர் பி.வாசுவின் மகனாக அறிமுகமானவர் நடிகர் சக்தி வாசு. ஆரம்பத்தில் தொட்டால் பூ மலரும் போன்ற படங்கள் மூலம் இளைஞர்களின் கவனத்தை ஈர்த்த இவர் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் தான் தவறவிட்ட இரண்டு மெகா ஹிட் படங்கள் குறித்த ரகசியத்தை உடைத்துள்ளார். இன்று சிவகார்த்திகேயன் மற்றும் விமல் ஆகியோரின் கேரியரில் மிக முக்கியமான மைல்கல்லாக இருக்கும் படங்கள் அது என்பதால் இந்த தகவல் தற்போது கோலிவுட்டில் செம வைரலாகி வருகிறது.
இயக்குனர் சற்குணம் இயக்கத்தில் விமல் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான களவாணி படத்தில் முதலில் நடிக்க வேண்டியது சக்தி வாசு தானாம். இந்த படத்தின் கதை முதலில் இவரிடம் தான் சொல்லப்பட்டிருக்கிறது. சில காரணங்களால் அந்த படத்தில் இவரால் நடிக்க முடியாமல் போக பின்னர் அந்த வாய்ப்பு விமலுக்கு சென்றுள்ளது. அந்த படம் விமலுக்கு ஒரு மிகப்பெரிய மார்க்கெட்டை உருவாக்கி கொடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த படத்தை மிஸ் செய்தது தன் கேரியரில் ஒரு பெரிய இழப்பு என சக்தி தற்போது வருத்தத்துடன் பகிர்ந்துள்ளார்.

அடுத்ததாக சிவகார்த்திகேயனை உச்சத்திற்கு கொண்டு சென்ற வருத்தப்படாத வாலிபர் சங்கம் பட வாய்ப்பும் இவருக்கே முதலில் வந்துள்ளது. இயக்குனர் பொன்ராம் இந்த படத்தில் போஸ் பாண்டி கதாபாத்திரத்தில் நடிக்க சக்தி வாசுவை தான் அணுகியுள்ளார். அப்போது இருந்த சில கமிட்மென்ட்ஸ் மற்றும் கால்ஷீட் பிரச்சனைகளால் சக்தியால் அந்த படத்தில் நடிக்க முடியவில்லை. பின்னர் அந்த படத்தில் நடித்த சிவகார்த்திகேயன் இன்று தமிழ் சினிமாவின் டாப் ஹீரோக்களில் ஒருவராக வளர்ந்து நிற்கிறார்.
திறமை இருந்தும் சரியான நேரத்தில் சரியான படங்களை தேர்வு செய்யாதது தான் சினிமாவில் பின்னடைவை ஏற்படுத்தியது என சக்தி ஓப்பனாக பேசியுள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஒரு சிறிய இடைவெளி எடுத்திருந்த சக்தி வாசு தற்போது மீண்டும் நல்ல கதைகளை கேட்டு வருகிறார். கிராமத்து பின்னணி கொண்ட இந்த இரண்டு படங்களையும் தான் நடித்திருந்தால் தன் சினிமா பயணம் இன்று வேறு மாதிரி இருந்திருக்கும் என அவர் ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார். இவரின் இந்த நேர்மையான பேட்டி தற்போது சமூக வலைதளங்களில் சினிமா ரசிகர்களால் அதிகம் விவாதிக்கப்பட்டு வருகிறது.













