தமிழ் சினிமாவில் பல தசாப்தங்களாக தனது தனித்துவமான நகைச்சுவை மற்றும் இரட்டை அர்த்த வசனங்கள் மூலம் ரசிகர்களை மகிழ்வித்தவர் நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி. 80 வயதைக் கடந்த நிலையிலும் இவருக்கு இன்னும் மவுசு குறையவில்லை. இப்போ இருக்கிற பல முன்னணி இயக்குனர்கள் கூட அவரை நடிக்க வைக்க ஆசைப்படுறாங்க. ஆனா, எல்லாருக்கும் ஒரு பெரிய அதிர்ச்சி கொடுக்குற மாதிரி, இப்போ ஒரு முக்கியமான முடிவை அவர் அறிவிச்சிருக்காரு. அது வேற ஒன்னும் இல்ல, “இனிமே நான் நடிக்க மாட்டேன், முழுசா ரிட்டயர்டு ஆகிட்டேன்” என்பது தான் அந்த அதிரடி முடிவு.
இந்த காலத்துலயும் இவரை நடிக்க வைக்கிறதுக்காக நிறைய தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்கள் படையெடுத்துட்டு இருக்காங்களாம். “எவ்வளோ பணம் வேணும்னாலும் தர்றோம், ஒரே ஒரு சீன்ல மட்டும் வந்துட்டு போங்க”ன்னு பல பேர் கேட்டும், அவர் எதற்கும் மசியலையாம். “எனக்கு இப்போ பணம் முக்கியம் இல்ல, நிம்மதி தான் முக்கியம். நான் சம்பாதிச்சது போதும், என் காலத்துக்கு அப்புறம் வர்ற பசங்களுக்கு அந்த வாய்ப்பு கிடைக்கட்டும்”னு ரொம்ப பெருந்தன்மையா பேசியிருக்காரு.

வெண்ணிற ஆடை மூர்த்தி தனது உடல்நிலையை கருத்தில் கொண்டும், அமைதியான வாழ்க்கையை வாழ விரும்புவதாலும் இந்த முடிவை எடுத்துள்ளாராம். 60 வருஷத்துக்கு மேல இந்த சினிமா பிளாட்ஃபாரத்துல டிராவல் பண்ண இவருக்கு, இப்போ இருக்குற அவசர உலகத்துல ஓடுறது கொஞ்சம் கஷ்டமா இருக்குன்னு தோணுது. அதனால தான், தனக்கு வர்ற வாய்ப்புகளை இளம் நடிகர்களுக்கு கொடுங்க, அது அவங்களுக்கு ஒரு பெரிய உதவியா இருக்கும்னு ஒரு சீனியர் ஆக்டரா அட்வைஸ் பண்ணிருக்காரு.
சினிமாவுல இருக்குற போட்டி தான். ஒரு வாய்ப்புக்காக எவ்வளவோ இளைஞர்கள் காத்துட்டு இருக்குறப்போ, நாமளே திரும்ப திரும்ப நடிக்கிறது சரியில்லைன்னு அவர் நினைக்கிறாராம். ஜோதிடம், எழுத்து, நடிப்புன்னு சகலகலா வல்லவரா இருந்த வெண்ணிற ஆடை மூர்த்தி, இப்போ முழு நேரமும் வீட்ல ஓய்வு எடுக்கவும், ஆன்மீகத்துல கவனம் செலுத்தவும் ஆசைப்படுறாராம்.
இவரோட இந்த முடிவை கேட்டு சினிமா வட்டாரமே கொஞ்சம் வருத்தத்துல இருக்கு. ஏன்னா, அவரோட டைமிங் காமெடிக்கும், அந்த வித்யாசமான சிரிப்புக்கும் இப்போ வரைக்கும் ஒரு தனி ரசிகர் கூட்டமே இருக்கு. ஆனா, அவரோட முடிவை நாம மதிக்கணும்னு ரசிகர்கள் இப்போ சோஷியல் மீடியாவில கமெண்ட் பண்ணிட்டு வர்றாங்க. ஒரு மிகப்பெரிய லெஜெண்ட் தன்னோட கேரியரை ரொம்ப கௌரவமா முடிச்சுக்கிட்டது, மத்த நடிகர்களுக்கு ஒரு முன்மாதிரியா இருக்குனு தான் சொல்லணும். வெண்ணிற ஆடை மூர்த்தியோட இந்த முடிவு இப்போ கோலிவுட் வட்டாரத்துல செம வைரல்.













