திரையுலகின் மூத்த இயக்குநர் பார்த்திபன், அண்மையில் நடைபெற்ற விருது வழங்கும் விழா ஒன்றில் நடிகர் விஜய் மற்றும் திரிஷா குறித்துத் தெரிவித்த கருத்து கோலிவுட்டில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. தயாரிப்பாளர் கல்பாத்தி சுரேஷ் மகனின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் இருவரும் ஒன்றாகக் கலந்துகொண்ட நிலையில், “குந்தவையைச் சில நாட்கள் வீட்டிற்குள்ளேயே பூட்டி வைக்க வேண்டும்” எனப் பார்த்திபன் கிண்டலாகக் கூறியது, விஜய்-திரிஷா இடையிலான காதல் வதந்திகளுக்கு மேலும் வலு சேர்ப்பதாக அமைந்துள்ளது.
கடந்த மார்ச் 5-ம் தேதி சென்னையில் நடைபெற்ற கல்பாத்தி சுரேஷ் வீட்டுத் திருமண வரவேற்பு நிகழ்ச்சிதான் தற்போது ஒட்டுமொத்தத் தமிழகத்தின் பேசுபொருளாக உள்ளது. நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா, தங்களுக்குள் விவாகரத்து கோரி நீதிமன்றத்தை நாடியுள்ளதாகத் தகவல்கள் கசிந்துள்ள நிலையில், அதே வாரத்தில் விஜய் மற்றும் திரிஷா இருவரும் ஒரே நிறத்தில் (Cream and Gold) ஆடை அணிந்து ஜோடியாகத் திருமணத்திற்கு வந்தது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இவர்கள் இருவரும் மேடையில் மணமக்களை வாழ்த்தும் வீடியோக்கள் இணையத்தில் காட்டுத்தீயாய் பரவிய நிலையில், பலரும் தங்களது அதிருப்தியைத் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக, ஒரு அரசியல் கட்சித் தலைவராகத் தன்னை முன்னிறுத்தும் விஜய், இவ்வளவு சீக்கிரம் இப்படியொரு பொதுத் தோற்றத்தைக் கொடுத்திருக்கக் கூடாது என அவரது சொந்தக் கட்சித் தொண்டர்களே முணுமுணுக்கத் தொடங்கியுள்ளனர்.
இந்தச் சூழலில், கலட்டா விருது வழங்கும் விழாவில் கலந்துகொண்ட பார்த்திபனிடம் திரிஷா குறித்துக் கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது அவர், ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் திரிஷா நடித்த குந்தவை கதாபாத்திரத்தை வைத்துப் பேசினார். “இந்தக் குந்தவையைச் சில நாட்கள் வெளியே விடாமல் வீட்டிற்குள்ளேயே வைத்திருக்க வேண்டும், அதுதான் நல்லது. வெளியே வந்தால் நிறையப் பிரச்சனைகள் வருகின்றன” என அவர் தனது வழக்கமான நையாண்டி பாணியில் கூறினார். இது நேரடியாகத் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்குத் திரிஷா வந்ததையும், அதனால் கிளம்பியுள்ள சர்ச்சைகளையும் பார்த்திபன் சுட்டிக்காட்டியதாகவே பார்க்கப்படுகிறது. பார்த்திபனின் இந்தப் பேச்சு இணையத்தில் வைரலான சில மணிநேரங்களிலேயே, விஜய் தனது கட்சி விழாவில் “தனிப்பட்ட வதந்திகளைப் பொருட்படுத்த வேண்டாம்” எனக் கூறியிருந்ததை எதிர்த்து பார்த்திபன் மீண்டும் ஒரு பதிவை எக்ஸ் (X) தளத்தில் வெளியிட்டார்.
It’s WORTH ! Worth & worth!
Because women is another EARTH .
பூமியை நாம்
பூமா தேவி என்றே அழைக்கிறோம்.
சாமா நாதன் என்று ஆணின் பெயர் கொண்டு அழைப்பதில்லை.
எவனோ even அவன் எமனோ அவனை
ஈன்றதும் ஒரு பெண்ணே,
சிவனே ஆனாலும் அவனின் சக்தி ஒரு women-ஏ !
Happy WOMEN’S DAY ! pic.twitter.com/N361cQEWbX— Radhakrishnan Parthiban (@rparthiepan) March 7, 2026
பெண்கள் தினத்தை முன்னிட்டு அவர் வெளியிட்ட அந்தப் பதிவில், “பெண்கள் என்பவர் பூமி தேவிக்குச் சமமானவர்கள். அவர்கள் வெறும் ‘Not Worth’ அல்ல, அவர்கள் தான் ‘Worth’” எனத் தனது பாணியில் விஜய்க்குப் பதிலடி கொடுப்பது போல் பதிவிட்டுள்ளார். விஜய் மற்றும் திரிஷா இடையிலான நட்பு 2004-ம் ஆண்டு ‘கில்லி’ படத்தில் தொடங்கி, தற்போது 2026-ம் ஆண்டிலும் தொடர்வது குறித்துப் பலரும் பலவிதமாகப் பேசி வருகின்றனர். ஒருபுறம் இது அவர்களது தனிப்பட்ட விருப்பம் என ஒரு சாரார் ஆதரவு தெரிவித்தாலும், நடிகை சனம் ஷெட்டி மற்றும் தயாரிப்பாளர் ஜி. தனஞ்செயன் போன்றோர், ஒரு பொது பிம்பம் கொண்டவர்கள் தார்மீகப் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும் என விஜய்யை மறைமுகமாகச் சாடியுள்ளனர்.
விஜய்யின் அரசியல் வாழ்க்கை தொடங்கும் இந்த முக்கியமான தருணத்தில், அவரது குடும்ப வாழ்க்கை மற்றும் திரிஷாவுடனான இந்தத் திடீர் பொதுத் தோற்றம் அவருக்குச் சாதகமாக அமையுமா அல்லது பாதகமாக அமையுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். பார்த்திபன் போன்ற ஒரு மூத்த கலைஞர், எதையும் யோசிக்காமல் குசும்பாகப் பேசி விடுவார் என்பது தெரிந்ததே. ஆனால், அவர் வீசிய இந்த ‘குந்தவை’ கமெண்ட் இப்போது திரிஷாவிற்கும் விஜய்க்கும் மிகப்பெரிய தலைவலியை உருவாக்கியுள்ளது. இந்த விவகாரம் குறித்துத் திரிஷா தரப்பிலிருந்து இதுவரை எவ்வித அதிகாரப்பூர்வ விளக்கமும் அளிக்கப்படாதது ரசிகர்களிடையே இன்னும் கூடுதல் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.













