இயக்குநர் எஸ்.ஜே. சூர்யா தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீரத்தமிழன் பாடல் வெளியீடு குறித்த தகவலைப் பகிர்ந்துள்ளார். ‘போராட்டம்’ திரைப்படத்தின் முதல் பாடலான “வீரத்தமிழன்'” பாடலை அவர் இணையதள வாயிலாக வெளியிட்டு படக்குழுவினருக்குத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார். சமூக வலைதளங்களில் தற்பொழுது இப்பாடல் வைரலாகி வரும் நிலையில், படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.
நடிகர் மற்றும் இயக்குநர் எஸ்.ஜே. சூர்யா தற்பொழுது பல்வேறு முன்னணித் திரைப்படங்களில் பிஸியாக நடித்து வரும் வேளையில், புதியவர்களின் முயற்சியில் உருவாகியுள்ள ‘போராட்டம்’ படத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இப்பாடலை வெளியிட்டுள்ளார். இத்திரைப்படத்தின் இசையமைப்பாளர் மற்றும் பாடலாசிரியர் குறித்த விவரங்கள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளன. கிராமிய மணமும் நவீன இசையும் கலந்த ஒரு துள்ளல் இசையாக இப்பாடல் அமைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
View this post on Instagram
இன்ஸ்டாகிராமில் இப்பாடலின் வீடியோ லிங்கைப் பகிர்ந்த எஸ்.ஜே. சூர்யா, தமிழ் உணர்வை வெளிப்படுத்தும் வகையில் பாடலின் வரிகள் அமைந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். ‘போராட்டம்’ திரைப்படம் ஒரு சமூக அக்கறை கொண்ட கதையம்சம் கொண்டது என்பதால், அதன் முதல் பாடலுக்கு ‘வீரத்தமிழன்’ என்று பெயரிடப்பட்டுள்ளது பொருத்தமாக இருப்பதாகத் திரைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. படத்தின் டீசர் மற்றும் டிரைலர் வெளியீடு குறித்த அறிவிப்புகள் அடுத்தடுத்த வாரங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.













