வில்லன் நடிகரின் அடியாள், குணச்சித்திர நடிகர், காமெடியன் என தமிழ் சினிமாவில் தனக்கு கிடைத்த கேரக்டர்கள் எல்லாவற்றையும் சிறப்பாக செய்திருந்தவர் பயில்வான் ரெங்க நாதன். இப்போது பட வாய்ப்புகள் அதிகமாக இல்லாத போதிலும் சினிமா விமர்சகராக இருந்து வருகிறார்.
தனது யூடியுப் சேனலில் சினிமா சம்பத்தப்பட்ட செய்திகளை அலசி ஆராய்ந்தும், அதன் மீதான விமர்சனங்களை அள்ளித்தெளித்தும் தனது காலத்தை ஓட்டி வருகிறார் இவர்.
சினிமா சம்பத்தப்பட்ட பெண் கலைஞர்களின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து எதிர்மறையான விமர்சனங்களை சொல்லி வருவதால் இவருக்கு சில இடங்களில் பொது மக்களிடையே எதிர்ப்பு இருப்பதாகத்தான் பார்க்கப்படுகிறது.
தமிழ் சினிமாவில் வெளியாகும் படங்கள் குறித்த விமர்சனங்களை இவர் வழங்கும் போது அதிகாமாக நெகட்டிவாகத்தான் சொல்லியிருப்பார்.

“தண்டுபாளையம்” படம் குறித்த இவரது விமர்சனம் எப்போதும் போல இல்லாமல், பாஸிட்டிவாக சொல்லியிருப்பது படத்தினை கூர்ந்து கவணிக்க வைத்துள்ளது. பொது ஹீரோக்கள தான் ஆன்டி-ஹீரோக்களாக நடித்து அதிகமாக பார்த்து வந்துள்ளோம். ஆனால் இந்த படத்தில் வனித விஜயகுமார், சோனியா அகர்வாலின் நடிப்பு பாராட்டு படியாக உள்ளதாக சொல்லியிருக்கிறார்.
சமீபத்தில் கவர்ச்சி நடிகை ஷகீலா -பயில்வானுக்கும் இடையே தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு பின்னர் இவர் கொடுத்திருக்கும் பாஸிடிவான விமர்சனம் சற்றே யோசிக்க வைத்து விட்டது.
எது எப்படியோ படம் பார்க்கும் விதமாக இருப்பதாக பயில்வான் சொல்லியிருப்பதை காதில் கேட்ட ரசிகர்கள் படத்திற்கு டிக்கெட் புக் பண்ண ஆரம்பித்துவிடுவார்கள். படத்தில் சில குறைகள் இருந்தாலும் படம் வயது வந்த ரசிகர்களை கவர்ந்திருக்கும் என சொல்லி தனது விமர்சந்தை முடித்துவிட்டார் பயில்வான் ரெங்கநாதன்.









