தஞ்சாவூர் மாவட்டம் களிமேடு என்கிற இடத்தில் நேற்று இரவு நடந்த அப்பர் ஸ்வாமிகள் தேர்த்திருவிழாவில் மின் கம்பி உரசியதில் தேர் எரிந்து சிலர் பலியாகினர்.
காயமுற்றவர்கள் சிலரும் பலியாகினர். இந்த தீ விபத்தில் இதுவரை 11 பேர் பலியாகினர்.
தமிழக முதல்வர் ஸ்டாலின், பிரதமர் மோடி, குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், அமமுகவின் டிடிவி தினகரன், பாஜக தலைவர் அண்ணாமலை, மக்கள் நீதிமய்யம் கட்சித்தலைவர் கமல் உள்ளிட்டோர் இதுவரை வருத்தமும் அஞ்சலியும் இதுவரை செலுத்தியுள்ளனர்.
இந்த நிலையில் தேர்த்திருவிழாவில் மரணமடைந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக சட்டசபையில் 5 நிமிடம் மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.
தஞ்சாவூர் தேர்த்திருவிழா விபத்து இந்திய அளவில் மக்களிடையே பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.













