---Advertisement---

பழனி பஞ்சாமிர்தம் வீட்டிலேயே செய்வது எப்படி

Published on: February 17, 2022
---Advertisement---

பார்த்த உடன் வாயூற செய்வது பழனி பஞ்சாமிர்தம். இனிப்பு பிரியர்களுக்கு பழனி பஞ்சாமிர்தம் என்றால் கொள்ளை ஆசை . பழனியில் மட்டுமே பஞ்சாமிர்தம் புகழ்பெற்றது என்றாலும் அந்த சுவைக்கு எப்படி வீட்டிலேயே பஞ்சாமிர்தம் செய்யலாம் என பார்ப்போம்.

இதற்கு தேவையான பொருட்கள்

மலை வாழைப்பழம்- கிடைக்கவில்லை என்றால் சாதாரண வாழைப்பழம் 6

பேரீச்சை – 20
காய்ந்த திராட்சை – கால் கப்
தேன் – 1/2 கப்,
நெய் – 2 டீஸ்பூன்
வெல்லம் அல்லது நாட்டுச்சர்க்கரை – அரை கப்
பனங்கற்கண்டு – கால் கப்
ஏலக்காய் – 2

*பேரிச்சம் பழத்தை சிறிது சிறிதாக பொடியாக நறுக்கி கொள்ளவும்

*ஏலக்காயை பொடி செய்து வாழைப்பழத்தை நன்றாக மசித்துக்கொள்ளவும்

*அகன்ற ஒரு பாத்திரத்தில் வாழைப்பழம், பேரிட்சை, காய்ந்த திராட்சை,தேன், நாட்டு சர்க்கரை, பனங்கற்கண்டு, ஏலக்காய் பொடித்தது போட்டு பிசைந்து கொள்ளவும்.

பிறகு அதில் நெய் சேர்த்து முருகனுக்கு படைத்து விட்டு நீங்களும் சாப்பிடலாம்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.