நீலகிரி மாவட்டம் மசினகுடி பகுதியில் போக்கு காட்டி வந்த புலி பிடிபட்டது. நீலகிரி மாவட்டம் மசினகுடி பகுதியில் ஒரு கொடூரமான புலி சிலரை அடித்து கொன்றது. அங்கு இருந்த கால்நடைகள் சிலவற்றையும் கடித்தது.
இதனால் இந்த புலியை பிடிக்க முயற்சி எடுக்கப்பட்டது. முதலில் சுட்டு பிடிக்க அறிவுறுத்தப்பட்டது ஆனால் சுட்டுபிடிக்க பலர் எதிர்ப்பு தெரிவித்ததால் புலியை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க முயற்சி செய்யப்பட்டது.
ஆனால் புலி யாரிடமும் மாட்டாமல் அந்த மாவட்டத்தில் உள்ள வனப்பகுதிகளில் சுற்றி சுற்றி வந்தது. ஒரு வழியாக இன்று புலி பிடிபட்டது.
மசினகுடி பகுதியில் மயக்க ஊசி செலுத்தி அந்த டி 23 புலியை வனத்துறையினர் பிடித்தனர்.







