கேரளா மாநிலத்தில் உள்ள வல்லசிரா என்ற பகுதியை சேர்ந்தவர் உன்னிகிருஷ்ணன்.இவர் தனக்கு பெண் பார்க்க எந்த ஒரு புரோக்கர்களையும் நாடி செல்லவில்லை.இந்நிலையில் உன்னிகிருஷ்ணன் தனது டீ கடை முன்பு ஜாதி, மதம் பேதமில்லை என செல்போன் நம்பரையும் குறிப்பிட்டு டீ கடையின் முன் போர்டு வைத்துள்ளார்.
பொதுவாகவே டீ கடைகள் முன்பாகவோ வீட்டின் முன்பாகவோ வேலைக்கு ஆட்கள் தேவை, வீடு வாடகைக்கு விடப்படும் என்பது மாதிரியான போர்டு வைத்துள்ளதைதான் நாம் பெரும்பாலும் பார்திருப்போம். ஆனால் இந்த ஃபோர்டு சற்று வித்தியாசமானது.
இந்த படத்தை அவருடைய நண்பர்கள் படம் எடுத்து சமூகவலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர்.இந்நிலையில் இப்புகைப்படம் இணையத்தில் வைரலானதை அடுத்து விளம்பரத்தைப் பார்த்து மலேசியா , ஆஸ்திரேலியா, போன்ற வெளிநாடுகளிலிருந்தும் தனக்கு விண்ணப்பங்கள் வருவதாகவும் உன்னிகிருஷ்ணன் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.













